tag:blogger.com,1999:blog-20574361513147695302024-03-06T08:19:51.010+01:00V1de0-Bl0Gநிகழ்கலைDr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger428125tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-35831398035189173162020-02-10T20:34:00.000+01:002020-02-29T20:34:47.032+01:00ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
**THF Heritage Video Release Announcement**<br />
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்<br />
<br />
வணக்கம்.<br />
<br />
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.<br />
சக ஆண்டு 792 இல், வரகுணபாண்டியனின் 8 ஆம் ஆட்சி யாண்டில் வெட்டப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு முதற்கொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும், அச்சணந்தி முனிவர் செய்வித்த தீர்த்தங்கரர் சிலை உட்பட 16 சமணப் பெரியார்களின் புடைப்புச் சிற்பங்களும் ஐவர் மலையின் சமணப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் காணப்படுகிறது. இன்று திரௌபதி அம்மன் கோயில் இடமாக உள்ள ஐவர் மலைப்பகுதி, முற்காலத்தில் சமணப்பள்ளி அமைந்திருந்த திருவயிரை என்றும் அயிரைமலை என்று அழைக்கப்பட்டிருந்தது என்பது வரலாறு. கல்வெட்டுகள் ஒன்றில் திருவயிரைப் பார்சுவபடாரர் என்று இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஐவர் மலைக் குகைப் பாறையில் மொத்தம் பதினான்கு கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பது கல்வெட்டுகள் தீர்த்தங்கரர்களின் சிற்பத்திருமேனிகளின் அடிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. திருமேனிகளைச் செய்வித்தவர் யார் என்பதை இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. செய்வித்தவர் என்பதைக்குறிக்க அவர் பெயருடன், “செயல்” என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. ஐவர் மலை குறித்து மேலும் பல விரிவான விளக்கங்களைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் அவர்கள் இக்காணொளியில் விளக்குகிறார்.<br />
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/j2ppwjx0gkQ/0.jpg" src="https://www.youtube.com/embed/j2ppwjx0gkQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்<br />
<br />
<br />
அன்புடன்<br />
<br />
முனைவர். தேமொழி<br />
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-22062023147913856442020-02-09T20:35:00.000+01:002020-02-29T20:36:18.609+01:00அரிட்டாபட்டி கல்வெட்டுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
**THF Heritage Video Release Announcement**<br />
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020<br />
<br />
வணக்கம்.<br />
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.<br />
<br />
மதுரை அரிட்டாபட்டியின் தமிழி கல்வெட்டும் வட்டெழுத்து கல்வெட்டுகளும் மதுரையில் வாழ்ந்த சமண சமயத்தவரைக் குறிக்கும் கல்வெட்டுகளாகும்.<br />
தமிழி கல்வெட்டின் மூலம் ‘நெல்வேலி சழிவன் அதினன் ஒளியன்’ என்பவர் இச்சமண பள்ளியை உருவாக்கிய செய்தியையும் அறிய முடிகிறது.<br />
குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே புடைப்புச் சிற்பமாக அர்த்தபரியாங்காசனத்தில் முக்குடையின் அமர்ந்துள்ள மகாவீர தீர்த்தங்கரரின் உருவத்தையும் காண முடிகிறது. இதனை கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார்.<br />
திருப்பிணையன் மலையிலிருந்த பொற்கோட்டுக் கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது என்ற செய்தி குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா<br />
<br />
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/GwDs_hVHYM8/0.jpg" src="https://www.youtube.com/embed/GwDs_hVHYM8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
<br />
<br />
<br />
மதுரை அரிட்டாபட்டி சமணக் கல்வெட்டுகள் குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா<br />
<br />
அன்புடன்<br />
முனைவர். தேமொழி<br />
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-77190696187346787422020-02-03T20:39:00.000+01:002020-02-29T20:39:15.264+01:00வடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும் இவர் 19 ஆம் நூற்றாண்டில் சென்னை ராயபுரம் பகுதியில் துவக்கிய பள்ளிகள் இந்நாட்களிலும் சி.எஸ்.ஐ. ராஜகோபால் பள்ளிகளாக கல்விப் பணியைத் தொடர்ந்து வருகின்றன.<br />
<br />
தமிழ் மரபு அறக்கட்டளை 11.1.2020 அன்று ஏற்பாடு செய்த வடசென்னை மரபு பயண நிகழ்வில் ஆய்வாளர் நிவேதிதா இப்பள்ளியைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/Uv_DxuzICzo/0.jpg" src="https://www.youtube.com/embed/Uv_DxuzICzo?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
வாருங்கள்.. வரலாற்றை அறிவோம்!<br />
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-53953934470419420652020-02-02T20:40:00.000+01:002020-02-29T20:40:27.739+01:00வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம்<br />
<br />
இஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி மையங்களுள் ஒன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ‘ரீஜனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் யுனானி மெடிசன்’ ஆகும். இந்த நிறுவனம் இயங்கிய பாரம்பரிய கட்டிடத்தின் அமைப்பையும், அதன் வரலாற்றையும், அதனை மரபுச் சின்னமாகப் பாதுகாக்க இயலுமா, அந்த முயற்சியில் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் எவை என்பதையும் விவரிக்கிறார் நிவேதிதா.<br />
<br />
<br />
காணொளி:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/oIbIkSpjTD4/0.jpg" src="https://www.youtube.com/embed/oIbIkSpjTD4?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
காண்போம்… வரலாறு அறிவோம்…<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-29827828623628474652020-02-02T20:28:00.000+01:002020-02-29T20:28:14.154+01:00திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfvUhliXsul6wABQEeibfAMeuHGYHCcm0leqv23B21itJBoeOQgb8xGCw33CWkXHcHr5_rp10OYoT8l1iQMT6IoIDiJ9whzIdaGj9Zn0Lk2HP0O-O9k6fVkas0zBUWMaz8vT92NOqh-jo/s1600/83163759_2647088718867842_4946880551995834368_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1018" data-original-width="720" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfvUhliXsul6wABQEeibfAMeuHGYHCcm0leqv23B21itJBoeOQgb8xGCw33CWkXHcHr5_rp10OYoT8l1iQMT6IoIDiJ9whzIdaGj9Zn0Lk2HP0O-O9k6fVkas0zBUWMaz8vT92NOqh-jo/s400/83163759_2647088718867842_4946880551995834368_o.jpg" width="282" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/UAsuN7_m4Y0/0.jpg" src="https://www.youtube.com/embed/UAsuN7_m4Y0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<br />
<div style="text-align: center;">
உரை 1- டாக்டர்.க.சுபாஷிணி - அறிமுகம்</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
உரை 2 - எழுத்தாளர்.கௌதம சன்னா</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/zpr7MNI7TA0/0.jpg" src="https://www.youtube.com/embed/zpr7MNI7TA0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
உரை 3 - டாக்டர்.ஷாலினி</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/iKQlf3LUmh8/0.jpg" src="https://www.youtube.com/embed/iKQlf3LUmh8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
4. உரை 4 - டாக்டர்.சங்கர சரவணன்</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/DD_FrUUaRyU/0.jpg" src="https://www.youtube.com/embed/DD_FrUUaRyU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
உரை 5 - திரு.பாலகிருஷ்ணன் இஆப</div>
</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-74177025564685134482020-01-29T20:42:00.000+01:002020-02-29T20:42:16.589+01:00வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் நெருப்புக் கோயில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்னையில் வாழும் பார்சி மக்களுக்காக 1910-ம் ஆண்டு எழுப்பப்பட்ட நெருப்பு ஆலயத்துக்கு ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘மெட்ராஸ் நெருப்புக் கோயில்’ தோன்றிய வரலாற்றைச் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 11.1.2020 அன்று காலை ஏற்பாடு செய்திருந்த வடசென்னை வரலாற்று தேடல் சுற்றுலா நிகழ்ச்சியில் சுவைப்பட விவரிக்கிறார் நிவேதிதா.<br />
<br />
வாருங்கள், வரலாற்றை அறிவோம்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/uFaYx8QxCuA/0.jpg" src="https://www.youtube.com/embed/uFaYx8QxCuA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
அன்புடன்<br />
<br />
முனைவர். தேமொழி<br />
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-13208632310417670702020-01-26T20:43:00.000+01:002020-02-29T20:43:34.790+01:00வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராசில் பார்சிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை நகருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இக்காணொளியில் விவரிக்கிறார் நிவேதிதா.<br />
<br />
வாருங்கள் – பார்த்து வரலாற்றை அறிந்து கொள்வோம்!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/Mp979NG6RwQ/0.jpg" src="https://www.youtube.com/embed/Mp979NG6RwQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
அன்புடன்<br />
முனைவர். தேமொழி<br />
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-83214885879821992822020-01-25T20:44:00.000+01:002020-02-29T20:44:53.150+01:00வடசென்னை – நம்ம மெட்ராஸ் – ஒபிலிஸ்க் மறக்கப்பட்ட சின்னம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
வட சென்னையில் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆங்கிலேயர் உருவாக்கிய வெற்றிடமான எஸ்ப்லாண்டியின் எல்லையைக் குறிக்கும் அடையாளத்தூனான ஓபிலிக்ஸ் குறித்தும், அதற்கான காரணத்தையும், கறுப்பர் நகர வரலாற்றுப் பின்னணியை விளக்குகின்றார் நிவேதிதா.<br />
<br />
வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம். வரலாற்றை அறிவோம்!!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/JheojoT83ZU/0.jpg" src="https://www.youtube.com/embed/JheojoT83ZU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
அன்புடன்<br />
முனைவர். தேமொழி<br />
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-19574443902027199102020-01-24T20:45:00.000+01:002020-02-29T20:45:56.060+01:00வடசென்னை – நம்ம மெட்ராஸ்- எம்டன் கப்பல் போட்ட குண்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த 11.1.2020 தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் வட சென்னை பகுதியில் ஒரு மரபு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சென்னையில் பாதுகாப்பற்று படிப்படியாக சிதைந்து மறைந்தும் அதன் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற வரலாற்று சின்னங்களை பார்த்து அவை பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட பதிவுகள் படிப்படியாக எல்லோரும் பார்த்து பயன் அடையும் வகையில் பகிர்ந்து கொள்ளப்படும்.<br />
<br />
அந்த வரிசையில் இன்று வருவது வட சென்னையில் முக்கிய சின்னங்களில் ஒன்றான ஜெர்மனியில் இருந்து வந்த எம்டன் கப்பல் போட்ட குண்டு விழுந்த இடத்தில் உள்ள கல்வெட்டு.<br />
<br />
இதன் வரலாற்றுப் பின்னணியை மிக அழகாக விளக்குகின்றார் நிவேதிதா.<br />
வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம்.<br />
<br />
வரலாற்றை அறிவோம்!!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/Yk4uGKdI5cM/0.jpg" src="https://www.youtube.com/embed/Yk4uGKdI5cM?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
அன்புடன்<br />
முனைவர். தேமொழி<br />
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-10076787749798599482020-01-13T20:47:00.000+01:002020-02-29T20:47:41.978+01:00ஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மதுரை நகர் வரலாற்றுச் சிறப்புகள் பல நிறைந்த ஒரு மாநகரம். மதுரை நகரின் ஒத்தக்கடை நரசிம்மர் குடைவரை இன்று பக்தர்கள் நிறைந்து காணப்படும் ஒரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கின்றது. இந்த குடைவரைக்கோயிலின் வரலாற்றையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் பற்றியும் அறிவோமா..? இக்கோயில் முற்கால பாண்டியர் காலத்து கோயிலாகும். கிபி 7ம் நூற்றாண்டில் பக்தி காலத்தின் பெரும் எழுச்சி பல சைவ வைணவ கோயில்கள் தமிழகத்தில் உருவாக்கம் பெறுவதற்குக் காரணமாகியது. இக்கோயில் பாண்டிய மன்னன் கோமாறன் சடையனின் அதிகாரியான மாறன் காரியென்பவனால் கட்டப்பட்டது. இக்கோயில் கட்டுமானப் பணி நிறைவடைவதற்கு முன்னரே இவன் இறக்கவே, அவனது தம்பி மாறன் எயினன் இந்தக் குடைவரைக் கோயில் கட்டுமானப் பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றுகின்றான். இச்செய்தி கோயில் கருவறைப்பகுதியில் வலது இடது பக்கச் சுவர்களில் ஒரு பக்கம் வட்டெழுத்துத் தமிழிலும், மறுபக்கம் அதே செய்தி சமஸ்கிருத மொழியிலும் என செதுக்கப்பட்டுள்ளது. <br />
<br />
இச்செய்திகளோடு மேலும் அக்கால பாண்டியர் கோயில் கட்டும் மரபு, குடைவரைக் கோயில் ஆகிய செய்திகளோடு இந்த விழியப் பதிவை வெளியிடுகின்றோம்.<br />
<br />
இப்பதிவு தமிழ் மரபு அறக்கட்டளை 30.12.2019 அன்று ஏற்பாடு செய்த ஒரு நாள் மதுரை மரபுப்பயணத்தின் போது பதியப்பட்டதாகும். இதன் விளக்கங்களை வழங்குகின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர்.கோ.சசிகலா. .<br />
<br />
பதிவைப் பார்த்து வரலாற்றை அறிவோம்:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/mbyVkyaOltU/0.jpg" src="https://www.youtube.com/embed/mbyVkyaOltU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-68080745822794342982019-11-18T21:37:00.002+01:002019-11-18T21:37:17.107+01:00இலங்கை நெடுந்தீவு உணவு - ஒடியல் கூழ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மனிதர்கள் வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்கேற்ப உணவு வகைகள் அமைகின்றன. இலங்கை நெடுந்தீவு ஒரு தனித்துவம் வாய்ந்த தீவு. பனை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பனங்கிழங்கை வைத்து தயாரிக்கும் உணவுப் பொருட்களும் கடல் சூழ்ந்திருப்பதால் கடல் உணவுகள் அதிகமாக உணவில் பயன்படுத்தப்படுவதும் இயல்பாகவே உள்ளது. அத்தகைய ஒரு உணவு தான் ஒடியல் கூழ்.<br />
<br />
அன்மைய தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் இலங்கை பயணத்தின் போது ஒரு நாள் நெடுந்தீவிற்குச் சென்றிருந்தோம். நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்களது இல்லம் அழகிய இயற்கிய சூழலில் அமைந்த ஒரு குடில். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் ஒருகுடில். அருகிலேயே சமைப்பதற்காக ஒரு தனி கூரை வேந்த குடிலும் இருக்கின்றது. ஒரு தபால் அதிகாரியான இவர் எங்கள் குழுவினருக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து காட்டினார். அவருடன் அவரது துணைவியாரும், தோழி தருமசீலியும் விளக்கங்கள் அளித்தார்.<br />
<br />
நெடுந்தீவு முழுமைக்கும் பனைமரம் நிறைந்துள்ளது. காயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது. ஒடியல் கூழுக்கு மிக அத்தியாவசியமான பொருள் இந்த ஒடியல் மாவு தான். பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த ஒடியல் கூழுடன் காயவைத்து நறுக்கிய பனங்கிழங்கு உருளைகளையும் உண்ணக்கொடுக்கின்றார்கள். <br />
<br />
இந்தப் பதிவில் இந்த ஒடியல் கூழ் நெடுந்தீவில் சமைக்கப்படுவதைக் காணலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/QVH-VOLXRSk/0.jpg" src="https://www.youtube.com/embed/QVH-VOLXRSk?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
நன்றி:<br />
திருமதி.தருமசீலி மற்றும் அவரது நெடுந்தீவு நண்பர்கள் திரு.திருமதி கணபதி குடும்பத்தினர்<br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]<br />
<div>
<br /></div>
</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-73668605004341352642019-11-16T21:36:00.000+01:002019-11-18T21:36:36.557+01:00கீழடி அகழாய்வின் சிறப்பு என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
*கீழடி அகழாய்வின் சிறப்பு என்ன?* -<br />
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்<br />
<br />
சமகாலச் சூழலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு அகழாய்வாகத் திகழ்வது கீழடி அகழாய்வு.<br />
இந்திய நாகரிகம் வடக்கிலிருந்து தோன்றியது என்ற கருதுகோளை மாற்றிய தமிழக அகழாய்வுகளில் கீழடி அகழாய்வும் இணைகின்றது. கொடுமணம், பொருந்தல், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, அழகன்குளம், காவிரிப்பூம்பட்டினம் என நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்திய சிறப்புகளின் தொடர்ச்சியாகக் கீழடி அகழாய்வு தொடர்கிறது. தமிழகத்தின் எந்த நிலப்பகுதியில் அகழாய்வு செய்தாலும் பண்டைய மக்களின் வாழ்வியலையும் சங்ககால பண்பாட்டினையும் காட்டும் சான்றுகள் கிடைக்கும் என்கின்றார் பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம். மேலும் அறிந்து கொள்ள பேட்டியை முழுமையாகக் காணவும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/b4oyOxbsI4s/0.jpg" src="https://www.youtube.com/embed/b4oyOxbsI4s?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
நன்றி:<br />
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்<br />
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்<br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]<br />
<div>
<br /></div>
</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-52510241734122103012019-11-09T21:35:00.000+01:002019-11-18T21:35:47.575+01:00இலங்கை கட்டுக்கரை அகழ்வாய்வு சொல்லும் செய்தி என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
*ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு*<br />
யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்<br />
<br />
அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர் டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் 2400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்.புஷ்பரட்ணம் கூறுகின்றார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/SMc6IEjAWDQ/0.jpg" src="https://www.youtube.com/embed/SMc6IEjAWDQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
நன்றி:<br />
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்<br />
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்<br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-7928982074672041582019-10-30T21:34:00.000+01:002019-11-18T21:35:05.141+01:00இலங்கையில் கண்ணகி வழிபாடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
*இலங்கையில் கண்ணகி வழிபாடு*<br />
-தொல்லியல் அறிஞர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுடன் நேர்காணல்<br />
<br />
தமிழகத்தின் பண்டைய வழிபாட்டு மரபுகளில் இடம்பெறும் தெய்வங்களில் கண்ணனி வழிபாடும் ஒன்று.<br />
<br />
நமது இலக்கியங்கள் கண்ணகி வழிபாடு நடைபெற்ற இடங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களில் கண்ணகி கோயில்கள் உள்ளன. இந்தத் தொன்ம வழிபாடு எவ்வகையில் இலங்கைக்குச் சென்றது? அது எவ்வாறு இலங்கை மக்கள் வழிபாட்டுக் கூறுகளில் இடம்பெறுகின்றது என்பதை தொல்லியல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விளக்குகின்றார் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம்.<br />
<br />
கண்ணகி வரலாறு புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வழக்கில் இருப்பதை ஆய்வு செய்யும் ஆய்வு மாணவ்ர்களுக்கு நல்ல பல தகவல்களை வழங்குகிறது இப்பேட்டி.<br />
<br />
இப்பேட்டியை நமக்காக வழங்கிய யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/OnnKg427H3Q/0.jpg" src="https://www.youtube.com/embed/OnnKg427H3Q?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-11005484820950573152019-10-15T21:40:00.000+02:002019-11-18T21:40:31.132+01:00அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் - அனுராதபுரம்<br />
<br />
இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் என்பது ஒருபுறம் பெரிய கோயிலும், மறுபுறம் புனித போதி மரமும் என இரு பெரும் பிரிவுகள் கொண்ட ஒரு வழிபாட்டு வளாகம். வெண்ணிற ஆடையணிந்தது வழிபாட்டிற்காகத் தினமும் பலநூறு பக்தர்கள் வருகை தரும் சிறப்புப் பெற்ற புத்த தலம்.<br />
<br />
ஆலயத்தின் ஒரு பகுதியில் இங்கு வழிபாட்டிற்கு வருவோருக்குச் சடங்குகளாகக் கையில் வெள்ளை நிறக்கயிறு கட்டப்பட்டு, நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு ஆசிர்வதிக்கப்படுவது ஒரு வழிபாட்டுமுறை. பக்தர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. கோயிலில் வழிபாடு நடக்கும் பொழுது மங்கல இசை வாசிக்கப்பட்டு அவற்றுடன் பாளி மொழி மந்திரங்களும் ஓதப்படுகின்றன.<br />
<br />
கோயில் வளாகத்தில் தொல்லியல் ஆய்வுகள் நடந்த சுவடுகளும் காணக்கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து அசோகப் பேரரசரின் மகன் மகிந்தனும், மகள் சங்கமித்திரையும் பௌத்த மதம் பரப்பும் நோக்கில் அரசர் உத்தரவின் பேரில் இலங்கைக்கு வந்த பொழுது, புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளையை இலங்கைக்குக் கொணர்ந்து வளர்த்த மரம் என இங்குள்ள மரத்தின் வரலாறு அறியப்படுகிறது. இம்மரம் இன்றும் வழிபடப்படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/ygODXsbFRzc/0.jpg" src="https://www.youtube.com/embed/ygODXsbFRzc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
இது குறித்த தகவல்களை எழுத்தாளர் திரு. கௌதம சன்னா அவர்கள் இக் காணொளியில் விளக்குகிறார். மஹா போதி வரலாறு குறித்து விளக்கமளித்த எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.<br />
<br />
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:<br />
அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்<br />
THFi - Jaya Sri Maha Bodhi - Anuradhapura<br />
<br />
அன்புடன்<br />
முனைவர். தேமொழி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-73227254197683384002019-08-11T21:33:00.000+02:002019-11-18T21:33:12.405+01:00தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமியின் அண்மைய தமிழ் எதிர்ப்பு கருத்துகள் பற்றி டாக்டர்.ராஜவேலு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அண்மைய காலத்தில் தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் நாகசாமியின் கருத்துக்கள் தமிழ் ஆய்வுலகில் சர்ச்சையை எழுப்பியிருப்பதை நாம் மறுக்கமுடியாது. இவர் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கண, இலக்கியங்கள் வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டு கையாளப்பட்டவை என்ற கருத்தில் 'Mirror of Tamil and Sanskrit' என்ற ஆங்கில நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில், பரத நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்கள் இவை என இந்த நூலில் குறிப்பிடுகின்றார். அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட ‘Thirukkural - An Abridgement of Sastras’ என்னும் நூலில் திருவள்ளுர் தர்மசாத்திரம், அர்த்த சாத்திரம், நாட்டிய சாத்திரம், காம சாத்திரம் ஆகிய வைதீக சாத்திர வேதமரபின் நூல்களின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளார் என்றும், திருக்குறள் நால் வருண முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், பிராமணர்களை வள்ளுவர் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுகிறார் என்றும் குறிப்பிடுகின்றார். அது மட்டுமன்றி பண்டைய தமிழ் தொல் எழுத்துக்கள் வட மொழி பிராமியிலிருந்து பெறப்பட்டவை என்றும் கி.மு. முதல் நூற்றாண்டில் தான் அவை தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தன என்றும் உண்மைக்கு எதிரான கருத்துக்களைk குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக தொல்லியல் அறிஞர் டாக்டர்.சாந்தலிங்கம், முனைவர் தமிழண்ணல், முனைவர் நடன காசிநாதன்; முனைவர். க. நெடுஞ்செழியன் போன்றோர் கண்டனங்களை பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு தனது கருத்துக்களைப் பதிகின்றார்.<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>டாக்டர் நாகசாமியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்கும் தற்கால கருத்துக்களுக்கும் உள்ள முரண்பாடு</li>
<li>வேதங்கள் அமைந்த மொழி எது</li>
<li>தமிழ் எழுத்துக்களுக்கு முன்னர் சமஸ்கிருதம் தோன்றியதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இல்லை</li>
<li>வடமொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் இலக்கியங்கள் தோன்றின என்னும் அவரது கருத்துக்கள்</li>
<li>சமஸ்கிருதம் எப்போது எந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புகுத்தப்படுகின்றது</li>
<li>பிரம்மசத்திரியர்கள் எனப்படுவோருக்கும் பிராகிருதம் சமஸ்கிருதத்திற்குமான தொடர்பு</li>
</ul>
<br />
<br />
இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/oFtkdoxHsdE/0.jpg" src="https://www.youtube.com/embed/oFtkdoxHsdE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<br />
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. <br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-13783763242495036992019-07-28T21:31:00.000+02:002019-11-18T21:31:58.230+01:00அகழ்வாய்வுகளின் வழி தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிவோம் - பகுதி 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ் மொழியின் பண்டைய எழுத்தான தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும் மக்களின் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருந்திருக்கின்றன என்பது நமக்கு தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற சான்றுகளாக அமைகின்றன. கி.மு.700 வாக்கிலேயே பொதுமக்களும் தங்களது பானை ஓடுகளில் பொறித்து வைக்கக்கூடிய வகையில் இந்த எழுத்து மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்ற சூழலில் இந்த எழுத்துரு அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி செம்மை பெற்று வளர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.<br />
<br />
இறந்த வீரனுக்காக மக்களால் எழுப்பப்படுபவை நடுகற்கள். நடுகற்களிலும் தமிழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளமையை மிக அண்மைய கண்டுபிடிப்பை குறிப்பிட்டு இந்தப் பதிவு பேசுகிறது.<br />
<br />
இதுகாறும் கிடைத்துள்ள தமிழி கல்வெட்டுக்கள் சமயம் சேராதவையாக இருப்பதும் இவ்வகை கல்வெட்டுக்கள் பொதுவாக யாரோ ஒருவர் யாருக்கோ வழங்கிய நன்கொடை, சேவை என்பதைச் சுட்டுவதாகவே அமைகின்றது என்றும், கிபி 4ம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவ ஆட்சி காலம் தொடக்கமே சமய சார்புடனான கல்வெட்டுக்கள் பெருகின என்றும் இப்பதிவில் டாக்டர்.ராஜவேலு குறிப்பிடுகின்றார்.<br />
<br />
இரண்டு பகுதிகளாக அமைந்த பேட்டியின் இறுதிப்பகுதி பகுதி இது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/gznNu5jIZQE/0.jpg" src="https://www.youtube.com/embed/gznNu5jIZQE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. <br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-43722173388360941932019-07-23T21:30:00.000+02:002019-11-18T21:31:06.522+01:00தமிழியின் (தமிழ்பிராமி) பழமை குறித்து டாக்டர்.க.ராஜன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் வழக்கில் இருந்தமையைத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. அசோகர் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் அமைந்தவை. இவை அசோகன் பிராமி எழுத்துருக்களால் எழுதப்பட்டவை. இவற்றின் காலம் கி.மு.3. அசோகன் பிராமியிலிருந்து தான் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் உருவாகின என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளது. இப்பேட்டியில் அதனை மறுக்கின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன்.<br />
<br />
தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களை அறிவியல் ரீதியாக ஆராயும் போது தமிழி எழுத்துக்கள் கி.மு.6க்கு முற்பட்டதாக இருப்பதையும் மக்கள் மொழியாக தமிழி வழக்கில் இருந்தமையையும் காண்கின்றோம். பேட்டியைக் காண<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/_wLCBBR9__U/0.jpg" src="https://www.youtube.com/embed/_wLCBBR9__U?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. <br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-37313196705441817972019-07-17T21:30:00.000+02:002019-11-18T21:30:17.153+01:00சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சாளுவன்குப்பம் அகழ்வாய்வுப்பணி தமிழகத்தின் முக்கிய அகழ்வாய்வுப் பணிகளில் ஒன்று. தமிழகத்திலேயே முதல் முதலில் முழு சங்ககால முருகன் கோயில் இங்கு தான் அகழ்வாய்வில் கிடைத்தது.<br />
<br />
இந்தப் பதிவில்<br />
<br />
<ul style="text-align: left;">
<li>சாளுவன் குப்பத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட வரலாறு</li>
<li>முருகன் - மக்கள் தலைவன்</li>
<li>கல்லினால் செய்யப்பட்ட வேல் </li>
<li>சுடுமண் உருவங்கள்</li>
<li>வைதீகம் உள்வாங்கிய முருகன் </li>
<li>வைதீகத்தின் தாக்கத்தால் புராணக்கதைகள் முருகனுக்கு தெய்வயானையை இணைத்த செய்தி</li>
<li>இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.</li>
</ul>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/Z4av8CIsO4A/0.jpg" src="https://www.youtube.com/embed/Z4av8CIsO4A?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. <br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-27934737765158503142019-07-12T21:29:00.000+02:002019-11-18T21:29:22.698+01:00பொருந்தல் அகழ்வாய்வுகள் சொல்லும் செய்திகள் என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சங்க கால குருநிலமன்னனாகிய பேகனின் பகுதியாக கருதப்படுகின்ற பொதிகையில் (பழனிக்கு அருகில்) பொருந்தல் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் நெல்மணிகள் வைக்கப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு 490 என இதனை ஆராய்ந்த அறிஞர்கள் கால நிர்ணயம் செய்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல.. இங்கு கண்டெடுக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருட்கள் ஆச்சரியம் தரும் தகவல்களை வழங்குகின்றன. பேட்டியைக் காண <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/6X9Oe0LxCzY/0.jpg" src="https://www.youtube.com/embed/6X9Oe0LxCzY?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
<br />
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. <br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-71362663316266868272019-07-09T21:28:00.000+02:002019-11-18T21:28:29.087+01:00கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழகத்தின் கொடுமணலில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறை சாற்றும் நோக்கத்தில் சிறப்பிடம் பெறுகின்ற ஒரு ஆய்வாகளாகும்.<br />
<br />
கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய கள ஆய்வுகளில் முதலில் பெருங்கற்கால பண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புலவர் இராசு அவர்களின் கள ஆய்வுகள் கொடுமணல் நாகரிகத்தின் தொண்மையை வெளிக்கொணர்ந்தன. அதனைத் தொடர்ந்து டாக்டர்.க.ராஜன் இப்பகுதியில் பல கள ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இதுவரை அங்கு 120க்கும் மேற்பட்ட தொல்லியல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சுப்பராயுலு அவர்களுடன் இணைந்து கொடுமணலில் ஆய்வுகள் தொடரப்பட்டன. பின்னர் 1990க்குப் பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.க.ராஜனின் தலைமையில் இங்கு தொல்லியல் அகழ்வாய்ப்பணிகள் தொடர்கின்றன. <br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>இந்தக் கள ஆய்வுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்தியா முழுமைக்குமான அகழாய்வுப் பணிகளில், மிக அதிகமாகத் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கொடுமணிலில் தான் கிடைத்துள்ளன.</li>
<li>கரிமச் சோதனைகள் இப்பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் கி.மு 5ம் நூற்றாண்டு பழமையானவை என்பதை நிரூபிக்கின்றன.</li>
<li>பண்டைய வணிகப் பெருவழிகளைப் பற்றிய விரிவான பல சான்றுகள் இந்த ஆய்வுகளில் கிடைத்துள்ளன. </li>
</ul>
<br />
<br />
இப்படி மேலும் பல சுவாரசியமான அகழ்வாய்வுச்செய்திகளை நம்மிடம் பகிர்கின்றார் தொல்லியல் அகழ்வாய்வு அறிஞர் டாக்டர்.க.ராஜன்.<br />
<br />
தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் தமிழர் நாகரிகத்தின் தொண்மையைக் கீழடி அகழ்வாய்வுகளுக்கு முன்னராகவே வெளிப்படுத்திய பெருமை கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, அழகன்குளம், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் சான்று பகர்கின்றன. ஆயினும் கூட இவ்வாய்வுச் செய்திகள் விரிவாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதும் ஒரு குறைபாடாகவே உள்ளது.<br />
<br />
தமிழகத்தின் கொடுமணல் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொல்லியல் பகுதி. <br />
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. <br />
<br />
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/W1wwVdrgrGA/0.jpg" src="https://www.youtube.com/embed/W1wwVdrgrGA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-44083617785117372742019-06-10T21:26:00.000+02:002019-11-18T21:26:50.951+01:00மன்னர்களின் செய்திகளை ஆராய்வது மட்டும் தான் வரலாறா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வரலாற்று ஆய்வு என்பது மன்னர்களின், பேரரசுகளின் வெற்றிகளையும், அவர்கள் பற்றிய நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வு என்பது மட்டுமே என்ற எண்ணம் பெரும்பாலும் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை, சமகால நிகழ்வுகள், குடிகளின் விவசாய மற்றும் தொழில் செயற்பாடுகள், சடங்குகள் வழிபாடுகள், பிற இனங்களின் வருகை, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என்பவை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்படுகின்றன என்பது நம் முன்னே நிற்கும் கேள்விகள்.<br />
<br />
சமூக விஞ்ஞானி பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். "ஆராய்ச்சி" காலாண்டிதழின் ஆசிரியர். தோழர் நா.வானமாமலை அவர்களின் சிந்தனை மரபினர். சமூகவியல் மானுடவியல் பார்வையில் களப்பணிகளின் வழியாக தமது ஆய்வினை நிகழ்த்தி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நூல்களைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கிய அறிஞர்.<br />
<br />
இவருடனான தமிழ் மரபு அறக்கட்டளையின் நேர்க்காணலில்<br />
<br />
<ul style="text-align: left;">
<li>சமூகவியல் ஆய்வுகள்</li>
<li>அடித்தள மக்களின் வரலாற்று ஆய்வு</li>
<li>தமிழகத்தில் சாதி </li>
<li>தமிழகத்துக்கு ஐரோப்பியர் வருகை </li>
<li>திருநெல்வேலியில் பாதிரியார் ரெய்னுஸ் அவர்களின் சமூகச் செயல்பாடு</li>
<li>தமிழகத்தில் கிருத்துவ மதத்தில் ஏற்பட்ட சாதிப்பாகுபாடு</li>
<li>மாடவீதியின் பின்னனி</li>
<li>மன்னர்களின் வரலாறு சொல்லும் செய்திகள்</li>
</ul>
<br />
...<br />
எனப் பல கோணங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.<br />
<br />
<br />
விழியப் பதிவு உதவி: திரு.செல்வம் ராமசாமி, ( THFi மதுரை)<br />
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி ( THFi கலிபோர்னியா)<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/N2JQRKfLNFw/0.jpg" src="https://www.youtube.com/embed/N2JQRKfLNFw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-9282159238904427722019-05-28T22:21:00.000+02:002019-05-28T22:21:05.638+02:00பேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இலங்கையின் மிக நீண்ட ஆறு என போற்றப்படும் மகாவலி ஆற்றின் கரையில் பேராதனை நகரில் அமைந்திருக்கின்றது பேராதனைப் பல்கலைக்கழகம். 700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பல்கலைக்கழக வளாகத்தை இது கொண்டுள்ளது. கண்டியிலிருந்து ஏறக்குறைய 10 கிமீ தூரத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/rbShnwd-ik8/0.jpg" src="https://www.youtube.com/embed/rbShnwd-ik8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் காப்பித்தோட்டமாக இருந்த பகுதி இன்று உலகத் தரம் வாய்ந்த மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை நூலகராகப் பணிபுரியும் திரு.மகேஸ்வரன்<br />
-இப்பல்கலைக்கழகத்தின் தோற்றம்<br />
-இதன் அமைப்பு<br />
-நூலகத்தின் தமிழ் நூல்கள்<br />
-இங்கு அடித்தளத்தில் பாதுகாக்கப்படும் இலங்கையின் மிக முக்கியமான ஆவணங்கள்<br />
-மிகப் பாதுகாப்பாக உள்ள பௌத்த சுவடிகள்<br />
-அரிய தமிழ் சஞ்சிகைகளின் தொகுப்புக்கள்<br />
..எனப் பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்கின்றார்.<br />
<br />
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்ச புராணத்தின் அடிப்படையில் காட்டு மிருகமான சிங்கத்திற்குப் பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயன். இவனே இலங்கையின் முதல் மன்னன் என இப்புராணம் கூறும். சிங்கபாகுவின் நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்கள் இந்தப் பல்கலக்கழகத்தில் பணியாற்றியவர். உலக அளவில் நாடகத்துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்களின் அனைத்து ஆவணங்களும், இந்தப் பல்கலைக்கழக நூலகத்தின் ஒரு அறையில் தனி முக்கியத்துவத்துடன் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் இந்த நூலகத்திற்கு உள்ள ஒரு சிறப்பு.<br />
<br />
நூலகத்தின் அடித்தளத்தில் சுரங்கப் பகுதியில் ஒரு தனி அறை உள்ளது. இங்கு மிக அரிய சுவடிகளும் ஆவணங்களும் செப்பேடுகளும் பாதுகாக்கப்படுகின்றன. 5200 சுவடி நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள சுவடிகள் சிங்களம், தமிழ், சமஸ்கிருதம், தாய்லாந்தின் தாய் மொழி என பல மொழிகளில் அமைந்தவை.<br />
<br />
தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் இலங்கை மன்னர் பரம்பரையில் நாயக்க மன்னர்களின் கலப்பு அதிகமானது. அச்சமயம் பௌத்த சமயம் அதன் முக்கியத்துவம் இழந்தது; வைணம் தழைக்கத் தொடங்கியது. பின்னர் பௌத்த சமயத்தை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது தாய்லாந்திலிருந்து திரிபிடகம் கொண்டுவரப்பட்டு மீண்டும் இலங்கையில் பௌத்தம் தழைக்கத் தொடங்கியது. அப்போது கொண்டு வரப்பட்ட அந்தத் திரிபிடக சுவடி நூல் இன்று இந்தப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அத்துடன் மன்னன் ராஜசிங்கன் காலத்து செப்பேடுகள் சிலவும் இந்த ஆவணப்பாதுகாப்பு அறையில் உள்ளன. இவை பெரும்பாலும் மன்னர் பலருக்கு அளித்த விருதுகளை விவரிப்பதாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட செப்பேடுகளாகும்.<br />
<br />
பேராதனைப் பல்கலைக்கழ நூலகத்தில் இன்றைய எண்ணிக்கையின் படி ஏறக்குறைய 8 லட்சம் நூல்கள் உள்ளன. அவற்றுள் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழ் நூல்களும் அடங்கும். இலங்கையில் வெளியிடப்படுகின்ற நூலின் ஒரு பிரதி இந்த நூலகத்தின் சேகரத்திற்கு அனுப்பப்பட வேண்டுமென்பது ஒரு சட்டமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
உதவி : பேரா.முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா<br />
<br />
<br />
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]<br />
<div>
<br /></div>
</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-42413139696318798882019-05-25T11:41:00.003+02:002019-05-25T11:41:44.362+02:00இலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அக்ட் 2, 2018<br />
நுவரெலியாவில் பேருந்து நிலையத்திலிருந்து கண்டி நோக்கிய எமது பயணத்தின் இடையே ஒரு ஆவணப்பாதுகாப்பகம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகர்.திரு.மகேஸ்வரன் தெரிவிக்க, அதனை அறிந்து கொள்ள தொடர்ந்தது தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணம்.<br />
<br />
பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி வாக்கில் இறங்கினோம். எங்களுக்காக ஆட்டோ வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்திருந்தார் ஒரு நண்பர். அவர் வேறு யாருமல்ல. அந்த ஆவணப்பாதுகாப்பகத்தின் அதிகாரி திரு. சந்தனம் சத்தியனாதன். அவரோடு ஆட்டோவில் ஏறக்குறைய 30 நிமிட பயணம். பசுமை எழில் நிறைந்த பகுதியில் கரடு முரடான சாலை. எங்கள் பயணம் தேயிலைத் தோட்டத்தின் ஊடே வழியில் சந்தித்த பெண் ஊழியர்களுடன் ஒரு கலந்துரையாடல் பதிவினையும் சேர்த்துத் தொடர்ந்தது.<br />
<br />
கி.பி.19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாது உயிர் வாழ புதிய நிலங்களுக்குப் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இலங்கையின் மலையகப்பகுதிக்கு வந்தனர். கடுமையான பல இன்னல்களைச் சமாளித்து காடுகளில் நீண்ட தூரம் கால்நடையாகவே பயணித்து மலையப்பகுதிகளுக்கு வந்தனர். முதலில் காப்பித் தோட்டங்களில் பணியில் ஈடுபட்டனர் இந்த மலையகத் தமிழ் மக்கள். காப்பித் தோடங்கள் பாதிக்கப்பட்டபோது தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. புதிய நிலத்திற்கு வந்தாலும் இங்கும் பல்வேறு இன்னல்களின் தொடர்ச்சி அவர்களை நம்பிக்கை இழக்க வைக்கவில்லை. அப்படி வந்து இலங்கையின் கணிசமான மக்கள் தொகையாக இன்று நிலைபெற்று விட்ட இந்திய வம்சாவளி தமிழர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.<br />
<br />
இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. முறையான ஆவணப்படுத்தலின் அவசியத்தை உணர்ந்து மலையகத் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பதிவு செய்திருக்கின்றது இங்குள்ள தேயிலைத் தோட்ட அருங்காட்சியகம். இலங்கையின் மலையகத்தில் நியூ பீக்கோக் தேயிலை எஸ்டேட் ராமன் துறை பகுதியில் அருங்காட்சியகம் மற்றும் ஆவணப் பாதுகாப்பகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. சந்தனம் சத்தியனாதன் இந்த விழியப் பதிவில் இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் மலையகத்திற்குத் தமிழக மக்கள் தொழிலுக்காகப் புலம் பெயர்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் விவரிக்கின்றார்.<br />
<br />
புதிய வாழ்க்கையைக் கடினமான சூழலில் அமைப்பது எளிதல்ல. சொந்தங்களை இழந்து வாழ்வா சாவா என்ற சூழலிலேயே தினம் தினம் அன்று வாழ்ந்த அம்மக்களின் வாழ்க்கைச் சூழலில் இன்று படிப்படியாக சில மாற்றங்கள் வந்துள்ளன. ஆனாலும் நிவர்த்திக்கப்படாத பல அடிப்படை தேவைகள் அப்படியே இன்றும் தொடர்வது தான் அவலம்.<br />
<br />
மலையகத் தமிழர்கள் பற்றிய வரலாற்று பின்புலத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கு இந்த விழியப் பதிவு பல தகவல்களை வழங்குகிறது.<br />
<br />
விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/eTANtNUa74M/0.jpg" src="https://www.youtube.com/embed/eTANtNUa74M?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
அன்புடன்<br />
முனைவர்.க.சுபாஷிணி<br />
[தமிழ் மரபு அறக்கட்டளை]</div>
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2057436151314769530.post-67164179206314743862019-05-19T06:17:00.001+02:002019-05-19T06:23:35.200+02:00முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவேந்தல்<p dir="ltr">ஜோகூர் பாரு, மலேசியாவில் நினைவேந்தல் <a href="https://m.facebook.com/story.php?story_fbid=10217159100202677&id=1625127280">கூட்டம்</a></p>
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0