Saturday, November 3, 2018

யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி: யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

கூத்துக்கலையை வளர்க்கும் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல் [அக்டோபர் - 2018]:
கலைவழி மனிதத்தை வளர்த்தல் என்ற நோக்கில் 1965 ஆம் ஆண்டு அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் துவக்கப்பட்டது, தொடர்ந்து கவின்கலை பயிலகம் என்று பல நுண்கலை வளர்க்கும் பணியை மேற்கொண்டது. திருமறை கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி வழியாக கூத்துக்கலையை சிறப்பாக வளர்த்துவருகிறது இக்கவின்கலை நிறுவனம்.

இந்த அமைப்பு போர்க்காலத்தில் சமாதான நோக்குடன் செயல்பட்டது, இலங்கையின் பல்வேறு இனமக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்தியது. அமைதிப் பணியை கலைமூலம் தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் சீரிய பணியைப் பாராட்டி மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி அவர்கள், அமைதிக்கான ஜனாதிபதி விருதினை 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு அளித்துக் கௌரவித்தார்.

நிறுவனர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுடனும், அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கூத்துக் கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல். போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் திருமறை கலாமன்றம் செயல்படுத்தியமை குறித்து விரிவாக இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படுகிறது. சில பாடல்களும் பாடப்படுகின்றன.

இந்த மண்ணின்குரல் மரபுக்காணொளி பதிவிற்கு உதவிய பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, November 1, 2018

கந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு
இலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர் பெளத்த சமய இடமாக வளர்ந்தது எனவும்  காட்டுகிறது.  தமிழக பௌத்தம் இதன் வளர்ச்சியில் கணிசமாகப் பங்காற்றியுள்ளது. ஆகவே இது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெளத்த ஆதரவில் வளர்ந்ததாகக் கருதப்படுவதில்லை. தமிழகம் சீனம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த பகுதி கந்தரோடை, ஸ்ரீலங்கா. பாளி இலக்கிய மொழியாகவும், பிராகிரதம் கல்வெட்டு மொழியாகவும் இருந்தது. மகாவம்சமும், பின்னர் சூலவம்சமும் இதன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது.  பின்னர் சிங்கள மொழி ஆதிக்கம் பெற்றாலும், பாளி மொழி பௌத்தத் துறவிகளாலும்,  பல்கலைக்கழகம் வழியாகவும் இன்றும் புழக்கத்தில் உள்ளது.  தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காததால், பின்னர் புத்தரின் உடலுறுப்புகளை வைத்து ஸ்தூபிகள் கட்டப்பட்டதா ஐதீக அடிப்படையில் நம்பப்படுகிறது, ஆயினும் அறிவியல் முறையில் இது உறுதிப்படுத்தப் படவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி -வரலாற்றுப் பதிவு பதிவுக்காக கந்தரோடை  - புராதன பௌத்த சின்னங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க: 


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

கந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின்  வரலாற்றுப் பதிவு: கந்தரோடை, ஸ்ரீலங்கா  - புராதன பௌத்த சின்னங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு


இலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர் பெளத்த சமய இடமாக வளர்ந்தது எனவும்  காட்டுகிறது.  தமிழக பௌத்தம் இதன் வளர்ச்சியில் கணிசமாகப் பங்காற்றியுள்ளது. ஆகவே இது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெளத்த ஆதரவில் வளர்ந்ததாகக் கருதப்படுவதில்லை. தமிழகம் சீனம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த பகுதி கந்தரோடை, ஸ்ரீலங்கா. பாளி இலக்கிய மொழியாகவும், பிராகிரதம் கல்வெட்டு மொழியாகவும் இருந்தது. மகாவம்சமும், பின்னர் சூலவம்சமும் இதன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது.  பின்னர் சிங்கள மொழி ஆதிக்கம் பெற்றாலும், பாளி மொழி பௌத்தத் துறவிகளாலும்,  பல்கலைக்கழகம் வழியாகவும் இன்றும் புழக்கத்தில் உள்ளது.  தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காததால், பின்னர் புத்தரின் உடலுறுப்புகளை வைத்து ஸ்தூபிகள் கட்டப்பட்டதா ஐதீக அடிப்படையில் நம்பப்படுகிறது, ஆயினும் அறிவியல் முறையில் இது உறுதிப்படுத்தப் படவில்லை.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி -வரலாற்றுப் பதிவு பதிவுக்காக கந்தரோடை  - புராதன பௌத்த சின்னங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர்  பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]