Tuesday, November 25, 2008

உத்தமம் வேங்கடரங்கன் பேட்டி

இணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம், விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை, தமிழில் அத்தகைய ஒருசீர்மைக்கு யூனிக்கோடு எங்ஙனம் உதவுகிறது என்பது பற்றிய ஆய்வு, இன்றைய இளைஞர்கள் கணினித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இணையத்தில் நிகழும் பல்வேறு மோசடிகள், அவற்றைச் சமாளிக்கும் விதம், டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன, பணவரவு செலவில் அதன் பயன்பாடு யாது, இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி ஆகியவை பெற்றுள்ள தனிச்சிறப்புகள், எதிர்காலத்தில் இணையம் பெறப்போகும் வளர்ச்சி, வலைப்பூக்களில் தமிழ் பெற்றுள்ள சிறப்பிடம்...

கணிப்பொறியாளர்கள் கைகட்டிச்சேவகம் செய்யவேண்டியதில்லை என்பதற்குத் தாங்களும் தங்களுக்கு முன்னரும் பின்னரும் வந்த தொழில் முனைவோர்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினீர்கள்.ஒபாமாவின் வருகையால் நமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதைச்சுட்டி அமெரிக்காவைப் பூச்சாண்டி காட்டிவருவோரின் அழிம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். தமிழக அரசு இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்புக்கு உத்தமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தீர்கள். இந்த அல்லது அடுத்த ஆண்டில் இணையமாநாடு நடத்தவேண்டிய சூழலை எடுத்துரைக்கத்தவறவில்லை.

முனைவர் மறைமலை இலக்குவனார்.