Saturday, April 12, 2014

கர்னல் காலின் மெக்கன்சி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடாக விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

காலின் மெக்கன்சி ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். இந்தோனீசியாவில் பணிபுரிந்து பின்னர் இந்தியாவிற்கு  நில அளவையாளராக பணி புரிய வந்தவர்.

இவரை பலரும் அறியாமல் இருக்கலாம். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமையிலும் ஆவணங்களைத் தேடியும் அவற்றை தொகுத்தும் வைத்தவர். தம் சொந்த பணத்தைச் செலவழித்து உதவியாளர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று அவர் தொகுத்தசுவடிகளும் படியெடுத்த கல்வெட்டுக்களும் இந்திய வரலாற்றைச் சொல்லும் சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன.

மெக்கன்ஸி தொகுத்த ஆவணங்கள் மூன்று பகுதிகளாக சென்னையிலும், கல்கத்தாவிலும், லண்டன் நூலகத்திலும் உள்ளன.

2013 மார்ச் மாதம் எனது தமிழகப் பயணத்தின் போது நேரடியாக அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்று நான் செய்த பதிவு இது.

காலின் மெக்கன்சியின் பணிகளை ஆய்வு செய்து இரண்டு நூல்களை வெளியுட்டுள்ள டாக்டர்.ம.ராஜேந்திரன் (முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக் துணைவேந்தர்( தனது நூலில் இப்படிக் கூறுகின்றார்.

18,19ம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் ஆகியோரும் தமிழகத்திலே உ.வே.சா, வ.உ.சி ஆகியோரும் தொகுப்பிலும் பதிப்பிலும் ஈடுபட்டவர்களில் முன்னோடிகளாவார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பும் பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின்பும் ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தில் ஆட்பட்டுக் கிடந்த இந்தியாவில் தொகுப்புப் பணியைத் தொடக்கிவைத்த முதல் ஐரோப்பியர் கர்னல் காலின் மெக்கன்சியாவார்.

12 நிமிடங்கள் வருகின்ற இப்பதிவில் காலின் மெக்கன்சியின் தொகுப்பாக அமைந்திருக்கும் பல சுவடிகளையும் வியப்பில் ஆழ்த்தும் வடிவிலான சுவடிக்கட்டுக்களையும் காணலாம்.



யூடியூபில் இப்பதிவைக் காண:https://www.youtube.com/watch?v=l2cTvQ2T3hI

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

1 comments:

Thiagarajan said...

Thankyou for the Video