Saturday, May 24, 2014

திருச்சி தமிழ்ச் சங்கம்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு செய்து வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது. 

இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என விரிவாக விளக்குகின்றார் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் (செயலாளர்).

இந்த விழியப் பதிவில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றையும் சங்கத்தின் மேலும் ஒரு பொருப்பாளர் விளக்குகின்றார்.

இப்பதிவு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நான் தமிழகத்தில் இருந்த பொழுதில் திருச்சி தமிழ்ச்சங்கக் கட்டிடத்திலேயே பதிவாக்கப்பட்டது.


யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=c86a_hHoE-w

இப்பதிவு ஏறக்குறைய  23  நிமிடங்கள் கொண்டது.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

0 comments: