Tuesday, August 26, 2014

நெல்லூர் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில்

ஆந்திர மாநிலத்திலிருக்கும் நெல்லூர் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வைணவத்தலம். 11ம் நூற்றாண்டில் ஸ்ரீராமானுஜ மாமுனி ஏற்படுத்திய கோயில் முறைமைகளை இன்றளவும் கடைப்பிடிக்கும் கோயில் இது. ஆந்திர மாநிலத்தில் அமைந்தாலும் இக்கோயிலில் செந்தமிழ்ப் பாசுரம் கருவறையில் ஒலிக்கிறது, இராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆழ்வார் பாசுரங்களை இமயம்வரை ஒலிக்கச் செய்த எம்பெருமானார் நினைவு போற்றுதற்குரியது.

0 comments: