Tuesday, October 23, 2018

மாரியம்மன் பாடல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள் வழிபாட்டிற்காகத் தொன்று தொட்டுப் பின்பற்றிய கடவுள்களுக்குக் கோயில் அமைத்தனர். அதனால் அக்கோயில்கள் தமிழக மண்ணில் பெரும்பான்மையாக அமைந்திருக்கும் சிவன், விஷ்ணு, பார்வதி, மீனாட்சி போன்ற பெருந்தெய்வங்களின் கோயில்கள் போலன்றி, நாட்டுப்புற மக்கள் வழிபட்ட சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் கோயில்களாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் குடிபெயர்ந்த தமிழர்கள்  மாரியம்மன் பாடல்களை தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.
 
 
திருமிகு. குருவம்மா, மலேசியாவைச் சேர்ந்தவர்.  இவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்திலிருந்து  குடிபெயர்ந்து மலேசியாவில் இன்று  குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்.   அவர் மாரியம்மன் வழிப்பாட்டுப் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி - நாட்டார் கலைகள் பதிவுக்காகப் பாடி வழங்கியுள்ளார்.
 
இப்பதிவில் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. அவை:
  • மாரியம்மா வருக மகமாரியம்மா வருக
  • திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக
  • செவ்வரளி பூவெடுத்து சிந்தையிலே உன்னை வைத்து
  • சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்
 
துணை நூல்கள்:
Encyclopedia of the Peoples of Asia and Oceania, Volume 1.Facts on File inc. p. 486.ISBN 0-8160-7109-8. - https://books.google.com/books?id=pCiNqFj3MQsC
 
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் நாட்டார் கலைகள் பதிவு மாரியம்மன் பாடல்கள் பதிவிற்கு உதவிய   திருமிகு. குருவம்மா, மலேசியா அவர்களுக்கு  எமது நன்றி.
 
யூடியூபில் காண:   


 
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: