Sunday, December 30, 2018

தமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு

தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனைவர்.நடன காசிநாதன். இதுவரை 101 வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர் என்ற பெருமைக்குறியவர் இவர்.  பல்வேறு கருத்தரங்கங்களில் சொற்பொழிவுகள், கள ஆய்வுப் பணிகள் என இவரது பணி தமிழக தொல்லியல் துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தப் பேட்டியில்

  • தொல் தமிழ் எழுத்துக்கள் எப்படி அழைக்கப்படவேண்டும் - தமிழ் பிராமி என்றா? தமிழ் என்றா? தொல் தமிழ்  என்றா?
  • ஐ எழுத்தின் தோற்றம்  
  • தொல் தமிழில் ஐ, மற்றும்   ஔ  எழுத்துக்கள்
  • கிரந்த எழுத்துக்கள் தொல் தமிழிலிருந்து உருவான எழுத்துக்களே
  • அரபி எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள்
  • மைசூர் கல்வெட்டு ஆவணங்களின் நிலை
  • களப்பிரர் காலம் இருண்ட காலமா? அல்லது சிறந்த காலமா?
  • களப்பிரர்   காலம் பற்றிய முனைவர் நடன காசிநாதன் அவர்கள் எழுதிய நூல்
  • கடல் ஆய்வுகள் வழி தொல்லியல் ஆய்வுகள்
  • குமரிக்கண்டம் தொடர்பான ஆய்வு
  • இவரது தலைமையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகள், கடற்கறையோர நகர்களில் கடலுக்கடியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள், இவரது கல்வெட்டு மற்றும் செப்புப் பட்டய கண்டுபிடிப்புக்கள் 
  • பூம்புகார், அழகன்குளம் ஆய்வுகள்

இப்படி பல்வேறு தகவல்களை இப்பேட்டியில் அவர் கூறுவதைக் கேட்கலாம்.

இன்று உடல் நலம் குன்றிய நிலையில்  இவர் இருந்தாலும் இந்தப் பேட்டியின் வழி தமிழக தொல்லியல் துறையின் நடவடிக்கைகள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் பேட்டிக்கு முழு ஒத்துழைப்பு நல்கினார்.  தமிழக வரலாற்றுத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் இவரது நூல்களை வாங்கி வாசிக்க வேண்டியது அவசியம். எளிய முறையில் கல்வெட்டுக்களைத் துறைசாராதவர்களும்  அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்திய இவரது பணி பாராட்டுதலுக்குறியது.

இந்தப் பேட்டிக்கான ஏற்பாட்டில் உதவிய மாதம்பாக்கம் திரு.அன்பன் ஐயா அவர்களுக்கும், இப்பதிவுகளை முழு விழியப் பதிவாக உருவாக்கித் தந்த முனைவர்.தேமொழி அவர்களுக்கும் நன்றி.




அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: