Monday, November 18, 2019

இலங்கை நெடுந்தீவு உணவு - ஒடியல் கூழ்

மனிதர்கள் வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்கேற்ப உணவு வகைகள் அமைகின்றன. இலங்கை நெடுந்தீவு ஒரு தனித்துவம் வாய்ந்த தீவு. பனை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பனங்கிழங்கை வைத்து தயாரிக்கும் உணவுப் பொருட்களும் கடல் சூழ்ந்திருப்பதால் கடல் உணவுகள் அதிகமாக உணவில் பயன்படுத்தப்படுவதும் இயல்பாகவே உள்ளது. அத்தகைய ஒரு உணவு தான் ஒடியல் கூழ்.

அன்மைய தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் இலங்கை பயணத்தின் போது ஒரு நாள் நெடுந்தீவிற்குச் சென்றிருந்தோம்.  நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்களது இல்லம் அழகிய இயற்கிய சூழலில் அமைந்த ஒரு குடில். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் ஒருகுடில். அருகிலேயே சமைப்பதற்காக ஒரு தனி கூரை வேந்த குடிலும் இருக்கின்றது.  ஒரு தபால் அதிகாரியான இவர் எங்கள் குழுவினருக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து காட்டினார். அவருடன் அவரது துணைவியாரும், தோழி தருமசீலியும் விளக்கங்கள் அளித்தார்.

நெடுந்தீவு முழுமைக்கும் பனைமரம் நிறைந்துள்ளது. காயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது. ஒடியல் கூழுக்கு மிக அத்தியாவசியமான பொருள் இந்த ஒடியல் மாவு தான்.  பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த ஒடியல் கூழுடன் காயவைத்து நறுக்கிய பனங்கிழங்கு உருளைகளையும்  உண்ணக்கொடுக்கின்றார்கள். 

இந்தப் பதிவில் இந்த ஒடியல் கூழ் நெடுந்தீவில் சமைக்கப்படுவதைக் காணலாம்.


நன்றி:
திருமதி.தருமசீலி மற்றும் அவரது நெடுந்தீவு நண்பர்கள் திரு.திருமதி கணபதி குடும்பத்தினர்

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: