Friday, June 27, 2008

அதிசயக் குழந்தை (2)



வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று மரணத்திற்குப் பின் என்ன? மறு ஜென்மம் உண்டா? என்பது!

இங்குதான் கண்டவர் விண்டதில்லை சமாச்சாரம் வருகிறது, ஏனெனில் நமக்கு போன ஜென்மத்தில் என்ன செய்தோம் என்று ஞாபகம் வருவதில்லை.

மறுஜென்மம் உண்டு என்று சொல்ல வரும் நிகழ்வு இன்று நிகழ்கலையில்.

ஒரு சின்ன வாண்டு ராகங்களைப் பட்டு, பட்டு என்று கண்டு சொல்கிறது! பாம்பே ஜெயஸ்ரீ சொல்வது போல் அவர் ஒரு ராகம் எடுத்து, அடுத்த ராகம் யோசிப்பதற்குள் இது சொல்லிவிட, அவர்களுக்கு யோசிக்க நேரம் கொடுப்பதில்லை இச்சிறுமி!

பச்சிளம் மாறாத முகம். கொட்டாவி விடுகிறது. கழுத்து செயினை நமண்டுகிறது. காது மட்டும் என்ன ராகம் என்பதில். ஆனால் குரலிலிருந்து ராகம் புறப்படும் போதே இவளிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்படும் போல..

கர்நாடக இசை| வயலின் (1)



எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவரது புதல்வி நர்மதா அவர்கள் இசைக்கும் வயலின் இசை. வயலின் தமிழிசைக்கு முத்துசாமி தீக்ஷ்தர் அவர்கள் குடும்பம் மூலமாக நுழைகிறது. மேலை வாத்தியமான அதை நம்மவர்கள் செல்ல நாய்குட்டிபோல் இவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும்படி செய்துவிட்டது அதிசயம்தான்! நல்லவேளையாக நின்று கொண்டு வாசிக்காமல் உட்கார்ந்து வாசிக்கிறார்கள் (அதுவும் நம் adaptation தான்).

கர்நாடக இசை| வயலின் (2)

எம்.எஸ்.ஜி & நர்மதா

Thursday, June 26, 2008

ஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (1)



ஜி.என்.பி என்று மக்களால் சுருக்கமாக அழைக்கப்பட்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம் ஓர் இசைப்புயல். இதை நான் சொல்லவில்லை, பிறவிப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா சொல்கிறார். இவர் காலங்களில் கர்நாடக இசை என்பது திரைக்குச் சென்று, பின் திரை மூலமாகப் பிரபலமாகி மீண்டும் இசைத்துறைக்குத் திரும்புவதைக் காணலாம். இன்றளவும் திரையில் பாடிய பாடகர்கள் கச்சேரிகளுக்கு கூட்டம் கூடுதலே. ஜி.என்.பி 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பற்றிய ஆவணப்படம் நம் நிகழ்கலைக்கு பத்மநாப ஐயர் (லண்டன்) புண்ணியத்தில் வந்து சேர்கிறது!

ஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (2)



புரியாத புதிர்: தமிழர்கள் ஏன் பேட்டிகளில் இப்படி ஆங்கிலத்தில் கபடி விளையாடுகிறார்கள்?

Wednesday, June 25, 2008

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (4)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (3)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (2)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (1)

Tuesday, June 24, 2008

செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர்



இன்று கர்நாடக சங்கீதம் என்று அறியப்படும் தமிழ் இசை சங்ககாலத்திலேயே வளர்ச்சியுற்று சிறப்புற்றிருந்ததை சிலம்பு செப்பும். கால ஓட்டத்தில் இவ்விசை பல்வேறு கூறுகளை இந்திய இசைப் பாரம்பரியங்களிலிருந்து எடுத்து வளர்ந்திருக்கிறது. இனிமேல் இதைத் திராவிட இசை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் இதன் சாகித்யங்கள் தெலுங்கிலும், கன்னடாவிலும், மலையாளத்திலும், தமிழிலும் அமைந்துள்ளன. வடமொழி பயிற்சியுள்ள பல சாகித்ய கர்த்தாக்கள் சமிஸ்கிருதத்தில் எழுதி இதை வளப்படுத்தியுள்ளனர். இதன் சமகாலப் பரிமாணம் இன்னுமொரு இந்திய ஒற்றுமை படிநிலையில் (pan Indian) நிற்கிறது. ஹிந்தி பஜன், மராட்டிய அபங், ஹிந்துஸ்தானி கzhaல் போன்றவை சமகாலப் பாடர்களால் நிறைய பாடப்படுகின்றன. இதையும் ஒருபடி தாண்டி அது சர்வ தேச முகமொன்றும் கொண்டுள்ளது. அதுதான் Fusion music என்பது. வெளிநாடு செல்வதென்பது பக்கத்து ஊருக்குச் செல்வது போல் ஆகிவிட்ட நிலையில் இவ்விசைக் கலைஞர்கள் வெளிநாட்டுக் குழுக்களுடன் சேர்ந்து பல கலப்பு சங்கீதத்தைத் தருகின்றனர். பக்தி இயக்கம் போல் தமிழ் மண்ணில் பிறந்த இந்த இசை ஒரு முழு உலகப்பரிமாணம் கொண்ட இசையாக மாறிவிட்டது. சினிமாவின் தாக்கமும் இதில் இப்போது சேர்ந்துள்ளது.

சமகால கச்சேரி பந்தா என்பதை அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் ஆரம்பித்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து பல பிரபல இசைக்கலைஞர்கள் இதை வளர்த்தெடுத்துள்ளனர். அரியக்குடியின் சிஷ்யர்களுல் ஒருவரான நாராயணசாமி ஐயர் போன்ரோரின் சமகாலத்தவர் செம்மங்குடி. இப்போது வாழும் கலைஞர்களில் மூத்த இசைஞர். இவர் தந்திருக்கும் ஒரு நேர்காணல் இன்று இடம் பெறுகிறது. முக்கியமாக இசையைக் காசுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது என்று ஒரு கருத்தை இவர் முன்வைக்கிறார். இது கல்வி பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொன்ன கருத்தோடு ஒத்துப்போகிறது!

இவர் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அவை...

Seenu - as he was called in his younger days was born on 25th July 1908 to Sri Radhakrishna Iyer and Smt Dharmasamvardhini Ammal in a small village called Semmangudi in Tanjore district. Even as a child, he showed keen interest in music. He would repeat the music he heard. His maternal uncle, Sri Thirukodikaval Fiddle Krishna Iyer was already in the lime light as a successful musician. His cousin and Sri Krishna Iyer's son-in-law Sri Narayanaswamy Iyer was beginning to taste success as a musician.

So, Radhakrishna Iyer decided that his son would follow his uncle and cousin and become a musician. Little boy Seenu's formal music training started on the Vijayadasami day of 1917 under cousin, Sri Narayana Swamy who was also living in Semmangudi.


மேலும் அறிய...