Friday, November 18, 2016

தமிழ் எண்கள் பொறித்த 16ம் நூற்றாண்டு தேவாலயம் (திருச்சி)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



​திருச்சியின் மையப்பகுதியில் கிறித்துவ தேவாலயங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த தேவாலயம் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பாலக்கரைபகுதியில் இடையர்தெரு எனப்படும் எடத்தெருவில் உள்ளது. கிபி 16ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில்.

செபமாலைமாதாகோயில் அல்லது பழையகோயில் என​ இந்தத் தேவாலயம் அழைக்கப்படுகின்றது. வரகனேரியில் உள்ள கோயிலை அடுத்து இதுவே தொன்மையானது​ம் கூட​. இக்கோயில் கோபுரத்தில் பத்துக்க​ட்டளைகள், அதாவது Ten Commandments​ தமிழிலேயே​ எழுதப்பெற்றுள்ளன. அவற்றைக்குறிப்பிடும் எண்கள் தமிழ் எண்கள். அக்கால​ப் பயன்பாட்டில்​ தமிழ்எண்கள் பயன்படுத்த பட்டுள்ளன​ என்பதற்கு இது நல்லச் சான்றாக அமைகின்றது​.​ இம்மாதிரியான ​ அக்கால​ தேவாலயங்களில்  சைவ வைணவக்கோயில்களைப்போல தேர்கள், தேர்ஓடும்வீதி​ என்பன ​உண்டு.இக்கோயிலைச்சுற்றிய தேரோடும்வீதி இன்றும்​ இருக்கின்றது​. இக்கோயில் உள்ள தெருவிலேயே உலகமீட்பர்பசலிகா உள்ளது.எனவே​ அதிலிருந்து​ இதனை​ ​வேறுபடுத்தி சொல்ல பழையகோயில் எ​ன இந்தத் தேவாலயத்தை அழைக்கின்றனர்.

இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்கும் பேரா.முனைவர்.வீரமணி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
 
யூடியூபில் காண:       https://www.youtube.com/watch?v=dF5xyOdo8W4&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

0 comments: