Saturday, November 12, 2016

திருச்சி தூயவளனார் கல்லூரியின் வரலாறு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


முதன் முதலில்   நாகப்பட்டினத்தில் தூயவளனார் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சிக்கு மாற்றம் செய்து அது முதல் திருச்சியிலேயே இக்கல்லூரி செயல்பட ஆரம்பித்தது.

தூய வளநார் கல்லூரியின் செயலாளர் திரு.செபாஸ்டியன், இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை ஆகியோர் கல்லூரியைப்பற்றிய அறிமுகத்தை வழங்குகின்றனர்.

 கல்லூரியின் அதிபர் அருட்தந்தை.பிரிட்டோ   இக்கல்லூ ரியின் வரலாற்றை விவரிக்கின்றார். அதில் குறிப்பாக:

  • 170 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் கல்லூரி
  • 16ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளிலும் மேலும் பல நகர்களிலும் சமயம் பரப்பும் பணியிலும் நலிவுற்ற மக்களுக்கு தொழில் மர்றும் கல்வித்துறைகளில் சேவைகளைச் செய்து வந்தமை
  • வீரமாமுனிவரின்   சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள்
  • பிரான்சு நாட்டிலிருந்து வந்த பாதிரிமார்களின் சேவைகள்
  • ராபர்ட்.டி.நோபிலியின் சமய, தமிழ் மொழி நடவடிக்கைகள் - மதுரை
  • கல்வியைப் பரவலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உரியதாக்க பாதிரிமார்கள் செய்த  முயற்சி
  • இக்கல்லூரியின் ஆய்வுத் துரைகள்
  • இக்கல்லூரியின் மிகப்பெரிய நூலகம்
  • இக்கல்லூரியில் படித்த அறிஞர்கள்

...
இப்படி   பல தகவல்களை விரிவாக இப்பேட்டியில் கேட்கலாம்.


இப்பேட்டியைச் செய்ய உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் திரு.சூசை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


யூடியூபில் காண:       https://www.youtube.com/watch?v=68-p5W-Pq8I&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

2 comments:

Alphonse said...

after listening to all these people I realise they know so less of the history of the college especially its beginning in Nagapatinum in 1844 Grant by English Governor..plus how they raised the basic structure on the ruins of celebrate Buddhist Perumpall/University f ancient Tamil Dravidar Sangam)...the periodic death of students nd clergy due to epidemics like cholora (the celebration of Corpus Christi procession every year in the college for protection even to this dy) the Tsunami of 1882 Dec 30..devastation of the college premises_ the crippling famine of 1870s).. shifting to Trichinopoly to a place bought from Nawabs of Arcot the legal struggles on the purchase) the great teachers and students over the ages.. the Church and the role of Rev.Fr.Frolly who is buried there..whom I used to walk with in the evening he was in his 80s I was in my teens) so much personal stories,, also how the earlier libry was built sanctified by Internuncio Mgr Knox.. much more history living there\

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம். நல்லதொரு வரலாற்றுப் பெட்டகத்தை தந்த சகோதரி முனைவர்.சுபாஷிணி அவர்களுக்கு நன்றி. St.Joseph’s College, Tiruchirapalli பற்றிய வரலாறு என்பது திருச்சிராப்பள்ளி வரலாற்றின் ஓர் அங்கம் ஆகும்.

தமிழ் மரபு அறக்கட்டளை செய்து வரும் தமிழ்ப்பணிக்கு நன்றி. உங்கள் இணைய தளத்தை அடிக்கடி வாசிக்கும் ஆயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.

இந்த கல்லூரிக்கு முன்னோடியாக இருக்கும் கிறிஸ்தவ ஆலயம், மற்றும் இந்த கல்லூரி குறித்து, படங்களுடன் - திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church) http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html என்ற தலைப்பினில் ஒரு பதிவு ஒன்றை வலைப்பக்கம் வெளியிட்டுள்ளேன்.

அன்புடன் – தி.தமிழ் இளங்கோ, திருச்சிராப்பள்ளி.