நிகழ்ச்சியில் நான் எடுத்த ஒளிப்பதிவை மேலேயும், எடுத்த எல்லாத் தெளிவான வண்ணப் படங்களை இங்கேயும் காணலாம்.
மூலம்: தி.ந.ச.வெங்கட ரங்கன்.
நிகழ்கலை
நிகழ்ச்சியில் நான் எடுத்த ஒளிப்பதிவை மேலேயும், எடுத்த எல்லாத் தெளிவான வண்ணப் படங்களை இங்கேயும் காணலாம்.
Posted by
Dr.N.Kannan
at
3:16 AM
0
comments
Labels: chennai, folk festival, sangamam, tamil maiyam
இணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம், விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை, தமிழில் அத்தகைய ஒருசீர்மைக்கு யூனிக்கோடு எங்ஙனம் உதவுகிறது என்பது பற்றிய ஆய்வு, இன்றைய இளைஞர்கள் கணினித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இணையத்தில் நிகழும் பல்வேறு மோசடிகள், அவற்றைச் சமாளிக்கும் விதம், டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன, பணவரவு செலவில் அதன் பயன்பாடு யாது, இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி ஆகியவை பெற்றுள்ள தனிச்சிறப்புகள், எதிர்காலத்தில் இணையம் பெறப்போகும் வளர்ச்சி, வலைப்பூக்களில் தமிழ் பெற்றுள்ள சிறப்பிடம்...
கணிப்பொறியாளர்கள் கைகட்டிச்சேவகம் செய்யவேண்டியதில்லை என்பதற்குத் தாங்களும் தங்களுக்கு முன்னரும் பின்னரும் வந்த தொழில் முனைவோர்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினீர்கள்.ஒபாமாவின் வருகையால் நமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதைச்சுட்டி அமெரிக்காவைப் பூச்சாண்டி காட்டிவருவோரின் அழிம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். தமிழக அரசு இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்புக்கு உத்தமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தீர்கள். இந்த அல்லது அடுத்த ஆண்டில் இணையமாநாடு நடத்தவேண்டிய சூழலை எடுத்துரைக்கத்தவறவில்லை.
முனைவர் மறைமலை இலக்குவனார்.
Posted by
Dr.N.Kannan
at
9:29 AM
1 comments
Posted by
Dr.N.Kannan
at
8:15 AM
2
comments
Labels: mahabalipuram, tropical forest
கண்ணன் என் காதலன்
ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்ûல்
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டா?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
(சுப்பிரமணிய பாரதி)
Posted by
Dr.N.Kannan
at
2:15 PM
0
comments
Labels: asai mugam, barathi, carnatic music, priya sisters
தெய்வத்தைக் குழந்தையாக வைத்துக் கும்பிடுவானேன்? என்றொரு கேள்வி எழுகிறது. சின்ன பதில், நடைமுறையில் காணும் காட்சியில் உள்ளது. குழந்தை கள்ளமற்றது. அம்மா, அடித்தாலும், மீண்டும் வஞ்சனை இல்லாமல் அம்மாவிடமே வந்து ஒட்டுவது! இதனால்தான் "குழந்தையும் தெய்வமும்" ஒன்று என்றனர். இறைவன் பரவஸ்துவாக, பராக்கிரமனாக, தனது விஸ்வரூபம் காட்டினால் வீராதி வீரர்க்ள் கூட (உம்.விஜயன்) பயந்துவிடுவர். அவனே கண்ணனாகக் கீழிறங்கி (அவதாரம்) வந்தால் நாமெல்லாம் அவனிடம் அண்ட முடிகிறது. கண்ணனைத் தோழனாக, சகாவாகப் பார்க்கமுடிகிறது. இப்படி அவன் கீழிறங்கி வந்தால்தான் நமக்கு கதி. இல்லையெனில் நாம் எக்காலத்தில், யோகம், நியமம் கற்று, மலங்களை அகற்றி சுத்த ஜீவனாய் அவனிடம் போவது?
பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை, கண்ணனின் பாலலீலைகளைப் படம் பிடிக்கும் அற்புதப்பாடல். இப்பாடலுக்கு இப்படிக்கூட பாவமிடமுடியுமா எனச் சவால் விடுகிறார் நர்தகி ராஜஸ்ரீ கிருஷ்ணன். இயக்கம் சங்கர் கந்தசாமி! கண்டு ரசியுங்கள்.
கண்ணனை சற்குருவாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அவனை நண்பனாக, தாயாக, காதலியாக, ஏன் வேலைக்காரனாகக் கூடப் பார்த்து அனுபவித்து இருக்கிறார் பாரதி!!
Posted by
Dr.N.Kannan
at
12:00 AM
0
comments
Labels: barathi, bharatanatyam, fine arts, krishna, temple
ஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணி ஐயரின், தோடி ராகக் கீர்த்தனையான
தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)!*
எனும் பாடல் மிகப்பிரபலமானது. இப்பாடல், மேற்கத்திய இசைக் கலப்புடன், வட இந்திய நடிகையான ஷோபனா அஸ்மி பாடுவதாக, "காலை ராகம்" எனும் ஆங்கிலப்படத்தில் இடம் பெறுகிறது! உலகம் ஓர் கிராமம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
Posted by
Dr.N.Kannan
at
11:18 AM
1 comments
Labels: film, Mahesh Dattani, morning raga, Shabana Azmi and Rajeev Menon, Sudha Ragunathan
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
(தீராத)
தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(தீராத)
அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்
(தீராத)
பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்
(தீராத)
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்
(தீராத)
Posted by
Dr.N.Kannan
at
11:52 PM
0
comments
தமிழ் திரையுலகில் புதுமையான படங்கள் எடுத்து சூப்பர் ஸ்டார் இயக்குனராக விளங்கியவர் ஸ்ரீதர். சரித்திர புராண கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் முடக்கி போட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் குணமாக வில்லை. நேற்று அவரது உடல்நிலை மோசமானது. அடையாறில் உள்ள மலர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. ஸ்ரீதர் உடல் நீலாங்கரை ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள் ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது. ஸ்ரீதர் மனைவி தேவசேனா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
நன்றி : தினத்தந்தி செய்தி
Posted by
Dr.N.Kannan
at
9:58 AM
0
comments
Labels: Director Sridhar, tamil cinema
Smt. M.L. Vasanthakumari (Vocal), Smt. Meena Subramaniam (Vocal support), Smt. A. Kanyakumari (Violin), Thiruvarur Shri Bhaktavatsalam (Mridangam), Shri G. Harishankar (Kanjira), Shri E. M. Subramaniam (Ghatam)
For more video of Thiruvarur Bhaktavatsalam, visit www.torontobrothers.com.
Posted by
Dr.N.Kannan
at
12:50 PM
1 comments
Labels: Bhaktavatsalam, Carnatic Mridangam, Ghatam, Kanjira, MLV
இத்துடன் உத்தர்மேரூர் கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பற்றிய அறிமுக ஆவணப் படம் அனுப்பியுள்ளேன். இந்த கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அவற்றை ஒலியும் ஒளியுமாக ஆவணப் படுத்தி மக்கள் காண ஒலி/ஒளி பரப்ப உள்ளோம். இதன் கட்டுமான செலவு சுமார் 80000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே! தமிழ் கூறும் நன்மக்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்," என்று ரீச் பவுஃண்டேஷன் வணங்கி வேண்டிக் கொள்கிறது.
'நான்மறை ஓதும் சதுர் வேதி மங்கலமாம் உத்தரமேரூரின் ஈசான மூலையில் உள்ள இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், ஊரில் செல்வம் குவியும், வளம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர்.
தமிழகத்தில் முழுதுமாய் எஞ்சியுள்ள பல்லவர் கோவிலில் இதுவும் ஒன்று. பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் மிக்க கோவில் இது. காலப் பெட்டகம். கோவிலோடு அந்த கல்வெட்டுக்களும், காலச் சின்னங்களும் அழிவதை நாம் தடுக்க வேண்டும்.
--
Regards
Chandrasekaran
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
Posted by
Dr.N.Kannan
at
7:50 AM
0
comments
Labels: Temple renovation, Uthiramerur
|
|
| Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
| Make this Group yours too! |
|
|
| MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
| உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
|
|
| Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
| Make your contribution TODAY |