இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
பொருட்பால்
இடுக்கணழியாமை
623.
Tuesday, February 10, 2009
திருக்குறளும் டாக்டர் அப்துல்கலாமும்
Posted by
நா.கண்ணன்
at
4:20 PM
1 comments
Labels: Dr.Abdulkalam, tirukkural, USA
Friday, January 16, 2009
இந்தியாவின் கதை
Story of India - BBC/PBS series by M. Wood
Posted by
நா.கண்ணன்
at
3:19 PM
0
comments
Labels: BBC/PBS series, M. Wood, Story of India
Bharathanatyam ~ மனதில் உறுதி வேண்டும்
Bharathanatyam ~ Bharathiyar Song ~ மனதில் உறுதி வேண்டும்
Posted by
நா.கண்ணன்
at
10:48 AM
0
comments
Labels: Bharathanatyam, Bharathiyar Song
Wednesday, January 14, 2009
சென்னைச் சங்கமம்
நிகழ்ச்சியில் நான் எடுத்த ஒளிப்பதிவை மேலேயும், எடுத்த எல்லாத் தெளிவான வண்ணப் படங்களை இங்கேயும் காணலாம்.
மூலம்: தி.ந.ச.வெங்கட ரங்கன்.
Posted by
நா.கண்ணன்
at
11:16 AM
0
comments
Labels: chennai, folk festival, sangamam, tamil maiyam
Tuesday, November 25, 2008
உத்தமம் வேங்கடரங்கன் பேட்டி
இணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம், விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை, தமிழில் அத்தகைய ஒருசீர்மைக்கு யூனிக்கோடு எங்ஙனம் உதவுகிறது என்பது பற்றிய ஆய்வு, இன்றைய இளைஞர்கள் கணினித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இணையத்தில் நிகழும் பல்வேறு மோசடிகள், அவற்றைச் சமாளிக்கும் விதம், டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன, பணவரவு செலவில் அதன் பயன்பாடு யாது, இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி ஆகியவை பெற்றுள்ள தனிச்சிறப்புகள், எதிர்காலத்தில் இணையம் பெறப்போகும் வளர்ச்சி, வலைப்பூக்களில் தமிழ் பெற்றுள்ள சிறப்பிடம்...
கணிப்பொறியாளர்கள் கைகட்டிச்சேவகம் செய்யவேண்டியதில்லை என்பதற்குத் தாங்களும் தங்களுக்கு முன்னரும் பின்னரும் வந்த தொழில் முனைவோர்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினீர்கள்.ஒபாமாவின் வருகையால் நமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதைச்சுட்டி அமெரிக்காவைப் பூச்சாண்டி காட்டிவருவோரின் அழிம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். தமிழக அரசு இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்புக்கு உத்தமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தீர்கள். இந்த அல்லது அடுத்த ஆண்டில் இணையமாநாடு நடத்தவேண்டிய சூழலை எடுத்துரைக்கத்தவறவில்லை.
முனைவர் மறைமலை இலக்குவனார்.
Posted by
நா.கண்ணன்
at
5:29 PM
1 comments
Thursday, November 20, 2008
மாபலிபுரம் கோயிலருகே அழிவு!
Posted by
நா.கண்ணன்
at
4:15 PM
2
comments
Labels: mahabalipuram, tropical forest
Saturday, November 1, 2008
ஆசை முகமறந்து போச்சே!
கண்ணன் என் காதலன்
ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்ûல்
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டா?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
(சுப்பிரமணிய பாரதி)
Posted by
நா.கண்ணன்
at
10:15 PM
0
comments
Labels: asai mugam, barathi, carnatic music, priya sisters
தீராத விளையாட்டுப் பிள்ளை - நாட்டியம்
தெய்வத்தைக் குழந்தையாக வைத்துக் கும்பிடுவானேன்? என்றொரு கேள்வி எழுகிறது. சின்ன பதில், நடைமுறையில் காணும் காட்சியில் உள்ளது. குழந்தை கள்ளமற்றது. அம்மா, அடித்தாலும், மீண்டும் வஞ்சனை இல்லாமல் அம்மாவிடமே வந்து ஒட்டுவது! இதனால்தான் "குழந்தையும் தெய்வமும்" ஒன்று என்றனர். இறைவன் பரவஸ்துவாக, பராக்கிரமனாக, தனது விஸ்வரூபம் காட்டினால் வீராதி வீரர்க்ள் கூட (உம்.விஜயன்) பயந்துவிடுவர். அவனே கண்ணனாகக் கீழிறங்கி (அவதாரம்) வந்தால் நாமெல்லாம் அவனிடம் அண்ட முடிகிறது. கண்ணனைத் தோழனாக, சகாவாகப் பார்க்கமுடிகிறது. இப்படி அவன் கீழிறங்கி வந்தால்தான் நமக்கு கதி. இல்லையெனில் நாம் எக்காலத்தில், யோகம், நியமம் கற்று, மலங்களை அகற்றி சுத்த ஜீவனாய் அவனிடம் போவது?
பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை, கண்ணனின் பாலலீலைகளைப் படம் பிடிக்கும் அற்புதப்பாடல். இப்பாடலுக்கு இப்படிக்கூட பாவமிடமுடியுமா எனச் சவால் விடுகிறார் நர்தகி ராஜஸ்ரீ கிருஷ்ணன். இயக்கம் சங்கர் கந்தசாமி! கண்டு ரசியுங்கள்.
கண்ணனை சற்குருவாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அவனை நண்பனாக, தாயாக, காதலியாக, ஏன் வேலைக்காரனாகக் கூடப் பார்த்து அனுபவித்து இருக்கிறார் பாரதி!!
Posted by
நா.கண்ணன்
at
8:00 AM
0
comments
Labels: barathi, bharatanatyam, fine arts, krishna, temple
Friday, October 31, 2008
தெற்கும் மேற்கும் சேர்ந்து வடக்கு நோக்கி
ஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணி ஐயரின், தோடி ராகக் கீர்த்தனையான
தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)!*
எனும் பாடல் மிகப்பிரபலமானது. இப்பாடல், மேற்கத்திய இசைக் கலப்புடன், வட இந்திய நடிகையான ஷோபனா அஸ்மி பாடுவதாக, "காலை ராகம்" எனும் ஆங்கிலப்படத்தில் இடம் பெறுகிறது! உலகம் ஓர் கிராமம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)
அனுபல்லவி
தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)
சரணம்
1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ! (தாயே)
2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)
3. எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன்
சங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
"உங்கள்மகன் நான் என்றான்! - சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி - எண்ணித் தவிக்கின்றார்! - நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)
4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு - "அம்மே" என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் "உன் செல்வமகன்!"
பட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ! (தாயே)
5. சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)
6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த - புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)
7. முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)
Posted by
நா.கண்ணன்
at
7:18 PM
1 comments
Labels: film, Mahesh Dattani, morning raga, Shabana Azmi and Rajeev Menon, Sudha Ragunathan
தீராத விளையாட்டுப் பிள்ளை - பாரதி
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
(தீராத)
தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(தீராத)
அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்
(தீராத)
பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்
(தீராத)
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்
(தீராத)
Posted by
நா.கண்ணன்
at
7:52 AM
0
comments