Wednesday, January 29, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராஸ் நெருப்புக் கோயில்

சென்னையில் வாழும் பார்சி மக்களுக்காக 1910-ம் ஆண்டு எழுப்பப்பட்ட நெருப்பு ஆலயத்துக்கு ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘மெட்ராஸ் நெருப்புக் கோயில்’ தோன்றிய வரலாற்றைச் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 11.1.2020 அன்று காலை ஏற்பாடு செய்திருந்த வடசென்னை வரலாற்று தேடல் சுற்றுலா நிகழ்ச்சியில் சுவைப்பட விவரிக்கிறார் நிவேதிதா.

வாருங்கள், வரலாற்றை அறிவோம்!



அன்புடன்

முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, January 26, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராசில் பார்சிகள்

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை நகருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இக்காணொளியில் விவரிக்கிறார் நிவேதிதா.

வாருங்கள் – பார்த்து வரலாற்றை அறிந்து கொள்வோம்!



அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, January 25, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – ஒபிலிஸ்க் மறக்கப்பட்ட சின்னம்


வட சென்னையில் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆங்கிலேயர் உருவாக்கிய வெற்றிடமான எஸ்ப்லாண்டியின் எல்லையைக் குறிக்கும் அடையாளத்தூனான ஓபிலிக்ஸ் குறித்தும், அதற்கான காரணத்தையும், கறுப்பர் நகர வரலாற்றுப் பின்னணியை விளக்குகின்றார் நிவேதிதா.

வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம். வரலாற்றை அறிவோம்!!


அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, January 24, 2020

வடசென்னை – நம்ம மெட்ராஸ்- எம்டன் கப்பல் போட்ட குண்டு

கடந்த 11.1.2020 தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் வட சென்னை பகுதியில் ஒரு மரபு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சென்னையில் பாதுகாப்பற்று படிப்படியாக சிதைந்து மறைந்தும் அதன் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற வரலாற்று சின்னங்களை பார்த்து அவை பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட பதிவுகள் படிப்படியாக எல்லோரும் பார்த்து பயன் அடையும் வகையில் பகிர்ந்து கொள்ளப்படும்.

அந்த வரிசையில் இன்று வருவது வட சென்னையில் முக்கிய சின்னங்களில் ஒன்றான ஜெர்மனியில் இருந்து வந்த எம்டன் கப்பல் போட்ட குண்டு விழுந்த இடத்தில் உள்ள கல்வெட்டு.

இதன் வரலாற்றுப் பின்னணியை மிக அழகாக விளக்குகின்றார் நிவேதிதா.
வாருங்கள் பயணத்தில் இணைந்து கொள்வோம்.

வரலாற்றை அறிவோம்!!


அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, January 13, 2020

ஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்

மதுரை நகர் வரலாற்றுச் சிறப்புகள் பல நிறைந்த ஒரு மாநகரம். மதுரை நகரின் ஒத்தக்கடை நரசிம்மர் குடைவரை இன்று பக்தர்கள் நிறைந்து காணப்படும் ஒரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கின்றது. இந்த குடைவரைக்கோயிலின் வரலாற்றையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் பற்றியும் அறிவோமா..? இக்கோயில் முற்கால பாண்டியர் காலத்து கோயிலாகும். கிபி 7ம் நூற்றாண்டில் பக்தி காலத்தின் பெரும் எழுச்சி பல சைவ வைணவ கோயில்கள் தமிழகத்தில் உருவாக்கம் பெறுவதற்குக் காரணமாகியது.   இக்கோயில் பாண்டிய மன்னன் கோமாறன் சடையனின் அதிகாரியான மாறன் காரியென்பவனால் கட்டப்பட்டது. இக்கோயில் கட்டுமானப் பணி நிறைவடைவதற்கு முன்னரே இவன் இறக்கவே, அவனது தம்பி  மாறன் எயினன் இந்தக் குடைவரைக் கோயில் கட்டுமானப் பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றுகின்றான். இச்செய்தி கோயில் கருவறைப்பகுதியில் வலது இடது பக்கச் சுவர்களில் ஒரு பக்கம் வட்டெழுத்துத் தமிழிலும்,  மறுபக்கம் அதே செய்தி சமஸ்கிருத மொழியிலும் என செதுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திகளோடு மேலும் அக்கால பாண்டியர் கோயில் கட்டும் மரபு, குடைவரைக் கோயில் ஆகிய செய்திகளோடு இந்த விழியப் பதிவை வெளியிடுகின்றோம்.

இப்பதிவு தமிழ் மரபு அறக்கட்டளை 30.12.2019 அன்று ஏற்பாடு செய்த ஒரு நாள் மதுரை மரபுப்பயணத்தின் போது பதியப்பட்டதாகும். இதன் விளக்கங்களை வழங்குகின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர்.கோ.சசிகலா. .

பதிவைப் பார்த்து வரலாற்றை அறிவோம்:



விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]