Wednesday, October 30, 2019

இலங்கையில் கண்ணகி வழிபாடு

*இலங்கையில் கண்ணகி வழிபாடு*
-தொல்லியல் அறிஞர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுடன் நேர்காணல்

தமிழகத்தின் பண்டைய வழிபாட்டு மரபுகளில் இடம்பெறும் தெய்வங்களில் கண்ணனி வழிபாடும் ஒன்று.

நமது இலக்கியங்கள் கண்ணகி வழிபாடு நடைபெற்ற இடங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களில் கண்ணகி கோயில்கள் உள்ளன. இந்தத் தொன்ம வழிபாடு எவ்வகையில் இலங்கைக்குச் சென்றது? அது எவ்வாறு இலங்கை மக்கள் வழிபாட்டுக் கூறுகளில் இடம்பெறுகின்றது என்பதை தொல்லியல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விளக்குகின்றார் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம்.

கண்ணகி வரலாறு புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வழக்கில் இருப்பதை ஆய்வு செய்யும் ஆய்வு மாணவ்ர்களுக்கு நல்ல பல தகவல்களை வழங்குகிறது இப்பேட்டி.

இப்பேட்டியை நமக்காக வழங்கிய  யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளின் தலைவர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம்   அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 



விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, October 15, 2019

அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்

ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் - அனுராதபுரம்

இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம் என்பது ஒருபுறம் பெரிய கோயிலும், மறுபுறம் புனித போதி மரமும் என இரு பெரும் பிரிவுகள் கொண்ட ஒரு வழிபாட்டு வளாகம். வெண்ணிற ஆடையணிந்தது வழிபாட்டிற்காகத் தினமும் பலநூறு பக்தர்கள் வருகை தரும் சிறப்புப் பெற்ற புத்த தலம்.

ஆலயத்தின் ஒரு பகுதியில் இங்கு வழிபாட்டிற்கு வருவோருக்குச் சடங்குகளாகக் கையில் வெள்ளை நிறக்கயிறு கட்டப்பட்டு, நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு ஆசிர்வதிக்கப்படுவது ஒரு வழிபாட்டுமுறை. பக்தர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. கோயிலில் வழிபாடு நடக்கும் பொழுது மங்கல இசை வாசிக்கப்பட்டு அவற்றுடன் பாளி மொழி மந்திரங்களும் ஓதப்படுகின்றன.

கோயில் வளாகத்தில் தொல்லியல் ஆய்வுகள் நடந்த சுவடுகளும் காணக்கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து அசோகப் பேரரசரின் மகன் மகிந்தனும், மகள் சங்கமித்திரையும் பௌத்த மதம் பரப்பும் நோக்கில் அரசர் உத்தரவின் பேரில் இலங்கைக்கு வந்த பொழுது, புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளையை இலங்கைக்குக் கொணர்ந்து வளர்த்த மரம் என இங்குள்ள மரத்தின் வரலாறு அறியப்படுகிறது. இம்மரம் இன்றும் வழிபடப்படுகிறது.


இது குறித்த தகவல்களை எழுத்தாளர் திரு. கௌதம சன்னா அவர்கள் இக் காணொளியில் விளக்குகிறார். மஹா போதி வரலாறு குறித்து விளக்கமளித்த எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:
அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்
THFi - Jaya Sri Maha Bodhi - Anuradhapura

அன்புடன்
முனைவர். தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]