Wednesday, July 16, 2014

இந்தோனீசியாவில் தொன்மையானதொரு இந்துக்கோயில்

சமீபத்தில் நடந்த தினமணிக் கருத்தரங்களிலும், பிற சமயங்களிலும் நான் தொடர்ந்து சொல்லிவரும் கருத்து இந்தியா தன் கூர்மையான பார்வையை கிழக்கு நோக்கித் திருப்ப வேண்டும் என்பதே!

தமிழனின் சரிதம் ஆழப்பதிந்த இடம் தென்னாசியா. அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மில் அதிர்வலைகளை உருவாக்க வேண்டும்.

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இந்துக் கோயில் இந்தோனீசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நூலகம் கட்ட மண்ணைத்தோண்டியபோது ஒரு முழுக்கோயிலே புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது!

Hindu Temple in Indonesia

இங்கு சோழர்களின் கைரேகை எவ்வளவு உள்ளது என்று நம் ஆய்வாளர்கள் அங்கு போய் ஆய்ந்து சொல்ல வேண்டும். தமிழக அரசு விரைவில் தென்னாசிய, தூரக்கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தைத் தொடங்கி இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

மலேசியா போல் இல்லாமல், இந்தோனீசிய அரசு தனது இந்துத்தொன்மையை மறைப்பதில்லை. 10 நூற்றாண்டில் கொற்கை தொடங்கி வியட்நாம்வரை ஒரு மாபெரும் இந்துப் பரப்பு இருந்திருக்கிறது! அதன் பல்வேறு கூறுகள் பற்றி நாம் அறிந்து கொள்ள இத்தகைய ஆய்வுகள் அவசியம்.