Sunday, June 21, 2015

திருமலை பஞ்சகுல தேவதைகள் ஜினாலயம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


திருமலை ஜைனமடத்தில் 2006ம் ஆண்டு பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இது ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு ஜினாலயம்.

சமண மதத்தில் சாசன தேவதைகளுக்கு ஆலயங்களும், சிற்பங்களும் அதற்கான வழிபாட்டு முறைகளும் நெடுங்காலமாகவே இருந்து வருகின்றது.  அதன் தொடர்ச்சியாகவே தற்போது இங்கு கட்டப்பட்டுள்ள ஆலயமானது ஐந்து தேவதைகளுக்காக அமைந்துள்ளது.

இயக்கி என்பது ஒரு ஆண்கடவுளின் துணைவி அல்ல. சமண மத கருத்துக்களின் படி இயக்கி, இயக்கன் என்பவர்கள் தீர்த்தங்கரர்களுக்கு பணிவிடை செய்யும் தேவதைகளாக உருவகப்படுத்தப்படுபவர்கள்!

இந்த ஆலயத்தின் பஞ்சகுல தேவதைகளின் அமைப்பு ஐங்கோண வடிவில் உள்ளது.

1.சக்கரேஸ்வரி - இவர் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் இயக்கி. இவரது வாகனம் கருடன். இவர் சத்தியத்தைக் கடைபிடிக்க துணையாக நிற்பவராக உருவகப்படுத்தப்படும் இயக்கி.

2.ஜ்வாலாமாலினி -  இவர் 8வது தீர்த்தங்கரர் சந்திரப்பிரபரின் இயக்கி. இவரது வாகனம் எருமை. மானுடர்களைத் துன்பம் நேராமல் காக்கும் இயக்கி இவர்.

3. கூஷ்மாண்டி - 28வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி இவர். இவரது வாகனம் சிம்மம். இவருக்கு அம்பிகா இயக்கி என்ற பெயரும் உண்டு. தருமத்தைக் காக்கும் தாயாகவும் இவர் உருவகப்படுத்தப்படுகின்றார்.

4.பத்மாவதி - இவர் 22வது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் இயக்கி. இவருக்கு வாகனமாக அமைந்திருப்பது குக்குடசர்பம். இவர் நோன்பு இருக்க மன உறுதி தரும் தேவதையாகக் கருதப்படுகின்றார்.

5. வராகி - வினைகளின் வேர்களை அருக்கும் தேவதை இவர்.  இவரது வாகனம் சிம்மம்.

இந்த ஜினாலயத்தில் உள்ள இந்த 5 சிற்பங்களும் ஏழு அடி உயரம் கொண்டவை.

இந்த ஐந்து சிற்பங்களோடு இக்கோயிலில் தனியாக ஒரு பகுதியில் சரஸ்வதிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: குறிப்புக்கள்  - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு


10 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=Z6AamUukUbA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, June 13, 2015

திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


திருமலை திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய பிரத்தியேகமான பேட்டி இது. தமிழகத்தில் தற்காலச் சூழலில் தமிழ்ச் சமணம் அருகி வருகின்றது.   இன்று  தமிழகத்தில் இருப்பவை இரண்டு மடங்களே. பழமை வாய்ந்த மேல்சித்தாமூர் சமண மடத்திற்கு  அடுத்ததாக ஆனால் மிகப் புகழ்பெற்ற சமணத்தலமாக விளங்குவது திருமலை. 

இங்கிருக்கும் ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தில் குழந்தைகள் ஆசிரம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏறக்குறைய 200 குழந்தைகள் தங்கியுள்ளனர். மடத்தின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் இயங்கி வருகின்றது. இதில் ஏறக்குறைய 1000 மாணாக்கர்கள் பயில்கின்றனர்.  இப்பள்ளி ஸ்ரீ நேமினாதர் மேல்நிலைப் பள்ளி என வழங்கப்படுகின்றது. 

முதியோர் காப்பகம் ஒன்றினையும் இந்த சமண மடம் நடத்தி வருகின்றது என்பதோடு வேற்று சமயத்தோராக இருந்தாலும் இங்கே அவர்களுக்கும் இடம் அளிக்கப்படுகின்றது என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு அம்சம். இவஎகள் திருநீறு, திருமண் ஆகிய பிற சமய புர அடையாளக்குறிகளை அணிவதையும் இம்மடம் தடை செய்யவில்லை. 

இதனைத் தவிர  இயலாதோருக்கு இலவச மருத்துவ உதவி, யாத்திரிகர் விடுதி, சாதுக்கள் தங்குமிடம், கோ சாலை ( பசுக்கள் காப்பகம்), நூலகம், நேமிநாதர் நூற்பதிப்பகம் ஆகியனவற்றோடு ஆரம்பப்பள்ளியும் மேல் நிலைப்பள்ளியும் இயங்கி வருகின்ரது.

அத்தோடு அருகாமையில் இருக்கும் நிலத்தில் இயற்கை விவசாயமும் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றது. 

மடாதிபதி யே இங்கு இம்மடத்தில் திருமணங்களை செய்து வைக்கின்றார். மடம் மக்கள் வந்து செல்லும் இடமாக எப்போதும் பொது மக்கள் நிரைந்திருக்கும் இடமாகவே இருக்கின்ரது. 

மடத்தின் வாசலில் எதிர்புறத்தில் பஞ்சகுல தேவைதைகள் ஆலயம் ஒன்றையும் இத்திருமடம் அமைத்திருக்கின்றது. பிரமாண்ட வடிவத்தில் ஐந்து தேவதைகளும் இங்கே வீற்றிருக்கின்றனர்.

இந்தப் பிரத்தியேகப் பேட்டியில்:

  • சமணம் என்பது  ஒரு சமயமல்ல, அது ஒரு மார்க்கம்
  • அகிம்சா கொள்கை
  • சமணம் எனும் தர்மம்
  • ஏன் சமணம் இந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளுக்கு பரவவில்லை?
  • மகாவீரர் தத்துவம் என்பது என்ன?
  • தீர்த்தங்கரர்கள்
  • சமண வழியில் இருக்கும்  பிரிவுகள்.. அதன் வித்தியாசங்கள்
  • புத்தர் சமணரா?
  • பக்தி காலத்தில் சைவ வைணவ எழுச்சியின் போது சமணம் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு எவ்வாறு சமணம் தொடர்ந்து நிலைத்து இருக்கின்றது
  • இக்கால நிலை
  • சமணத்தில் சோதிடம் எவ்வாறு காணபப்டுகின்றது
  • இந்த மடம் உருவாக்கபப்ட்ட வரலாறு..

என பல தகவல்களை அடிகளார் வழங்குகின்றார்.

பிறப்பும் இறப்பும் மட்டுமே வாழ்க்கை அல்ல. நமது கர்ம விணைகளை நீக்கி பரமாத்மா அம்சத்தை ஒவ்வொரு சீவனும் சென்று சேரலாம். சாதி பேதம் என்பதோ சிறியவர் பெரியவர் என்ற பேதமோ தேவையற்றவை.பரமாத்மா அம்சத்தை பெற இவை தடையல்ல என்ற கருத்தோடு இப்பேட்டி நிறைவடைகின்றது
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி.

50  நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=zjIWJd_uYLs&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Thursday, June 4, 2015

ஸ்ரீ குந்த குந்தர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


பண்டைய காலத்தில் தென் இந்திய பாடலிபுத்திரம் என்றும் பாடலிகா என்றும் வழங்கப்பெறும் திருப்பாதிரிப்புலியூர்  சமண மத இலக்கியங்கள் பல உருவான மையமாகத் திகழ்ந்த ஒரு பகுதி. இந்தக் கல்விக்கூடத்தை  நிறுவியவர் குந்த குந்தர் என்றழைக்கப்படும் ஹேளாச்சாரியார் என்ற சமண ஆசிரியர்.

இவர் எழுதிய நூல்கள், தமிழ், வடமொழி, சௌரசேனி ஆகிய மொழிகலில் உள்ளன. திருக்குறளை எழுதிய சமண ஆச்சாரியார் இவரே என்பது சமண மதத்தை பின்பற்றுவோரும் தமிழ் ஆய்வாளர் சிலரும் கொண்டிருக்கும் கருத்து.  இவர் கி.பி.1ம் நூற்றாண்டு தமிழகம் வந்து வந்தவாசி நகருக்கு தென்மேற்கில் உள்ள பொன்னூர் மலையில் தங்கியிருந்ததாக சமண நூற்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இவர் எழுதிய நூற்களில் திருக்குறள், பஞ்சாஸ்திகாயம், பிரவசன சாரம், சமயசாரம், நியமன சாரம், பாரஸ அனுவேக்கா ஆகியவற்றுடன் எட்டு பாகுடங்கள், பல சமண பக்தி நூற்கள் உட்பட 84 நூற்கள் அடைபாளம் காணப்படுகின்றன. பொன்னூரில் சமண மத திராவிட அமைப்பிற்கு தலைவராக மாமுனிவர் ஹேளாச்சாரியார் இருந்தார் என காணப்படுகின்றது.
குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு - ஆர்.விஜயன்

இப்பதிவில் ஸ்ரீகுந்தகுந்தரின்  பெயரால் இயங்கும் ஆய்வு மையமும் தியான மணடபமும் முதலில் இடம்பெறுகின்றது. இதனைத் தொடர்ந்தார் போல வரும் பகுதியில் சாலையின் நேர் எதிர்ப்புறம் அமைந்துள்ள மலையுச்சியில் அமைந்திருக்கும் ஸ்ரீ குந்த குந்தர் நினைவு மண்டபம் காட்டப்படுகின்றது.  மலையுச்சிக்குக் செல்லும் பாதை மிக நன்கு பராமரிக்கப்பட்டுள்ளமையினால் மேலே செல்வதற்கு சிரமம் ஏதுமில்லை. நினவு மண்டபத்தின் உள்ளே ஆதியில் அமைக்கபப்ட்ட ஸ்ரீ குந்த குந்தரின் திருவடிகள் உள்ளன. அவை சிதலமடைந்திருப்பதால் புதிய திருவடிகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ குந்த குந்தரின் சிலை வடிவம் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, ஆகியோர்க்கு என் நன்றி.

9 நிமிடப் நேரப் பதிவு இது.


யூடியூபில் காண: 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]