Tuesday, April 29, 2014

திருஎறும்பேஸ்வரர் கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் மேலும் ஒரு கோயில்.!

விலங்குகள் வழிபடும் ஆலயங்கள் என பிரத்தியேகமாக குறிப்பிடப்படும் ஆலயங்களின் வரிசையில் எறும்புகள் வழிபட்ட தலமாக கருதப்படுவது திருவெறும்பேஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் புற்றுமண்ணால் உருவாகியிருக்கும் சுயம்புலிங்கம். அபிஷேக காலங்களில் லிங்க வடிவத்தின் மேல் கவசம் அணியப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.

விழியப் பதிவைக் காண:


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=7cfjTStpZ3U

இப்பதிவு ஏறக்குறைய 13 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் இங்கே!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவ்ல்களை பகிர்ந்து கொள்பவர் இந்திய தொல்லியல் துரை ஆய்வு மாணவர் பரந்தாமன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, April 12, 2014

கர்னல் காலின் மெக்கன்சி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடாக விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

காலின் மெக்கன்சி ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். இந்தோனீசியாவில் பணிபுரிந்து பின்னர் இந்தியாவிற்கு  நில அளவையாளராக பணி புரிய வந்தவர்.

இவரை பலரும் அறியாமல் இருக்கலாம். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமையிலும் ஆவணங்களைத் தேடியும் அவற்றை தொகுத்தும் வைத்தவர். தம் சொந்த பணத்தைச் செலவழித்து உதவியாளர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று அவர் தொகுத்தசுவடிகளும் படியெடுத்த கல்வெட்டுக்களும் இந்திய வரலாற்றைச் சொல்லும் சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன.

மெக்கன்ஸி தொகுத்த ஆவணங்கள் மூன்று பகுதிகளாக சென்னையிலும், கல்கத்தாவிலும், லண்டன் நூலகத்திலும் உள்ளன.

2013 மார்ச் மாதம் எனது தமிழகப் பயணத்தின் போது நேரடியாக அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்று நான் செய்த பதிவு இது.

காலின் மெக்கன்சியின் பணிகளை ஆய்வு செய்து இரண்டு நூல்களை வெளியுட்டுள்ள டாக்டர்.ம.ராஜேந்திரன் (முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக் துணைவேந்தர்( தனது நூலில் இப்படிக் கூறுகின்றார்.

18,19ம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் ஆகியோரும் தமிழகத்திலே உ.வே.சா, வ.உ.சி ஆகியோரும் தொகுப்பிலும் பதிப்பிலும் ஈடுபட்டவர்களில் முன்னோடிகளாவார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பும் பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின்பும் ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தில் ஆட்பட்டுக் கிடந்த இந்தியாவில் தொகுப்புப் பணியைத் தொடக்கிவைத்த முதல் ஐரோப்பியர் கர்னல் காலின் மெக்கன்சியாவார்.

12 நிமிடங்கள் வருகின்ற இப்பதிவில் காலின் மெக்கன்சியின் தொகுப்பாக அமைந்திருக்கும் பல சுவடிகளையும் வியப்பில் ஆழ்த்தும் வடிவிலான சுவடிக்கட்டுக்களையும் காணலாம்.



யூடியூபில் இப்பதிவைக் காண:https://www.youtube.com/watch?v=l2cTvQ2T3hI

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Sunday, April 6, 2014

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இன்று மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினம். அதனை முன்னிட்டு மகாவித்வான் தங்கியிருந்து தமிழ்த்தொண்டு செய்த திருவாவடுதுறை ஆதீன மடம், புலவர்கள் விடுதி, சரசுவதி மகால் நூலகம். ஓலைச்சுவடி நூல்கள், ஆதீ​​னத்தின் சுற்றுவளாகம் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு சிறிய விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது. இப்பதிவு 13 நிமிடங்கள்

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருவாவடுதுறை மடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது அங்கு பதிவு செய்யப்பட்ட விழியம் இது.

யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=NBk7eMt9gOY


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Friday, April 4, 2014

மின்தமிழ் தோற்றமும், வளர்ச்சியும்: நா.கண்ணனுடன் நேர்காணல்

மணவை முஸ்தபா அவர்களின் புதல்வரும், நரம்பியல் மருத்துவரும், மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையின் அறக்காவலருமாகிய டாக்டர் செம்மல் அவர்கள் பேராசிரியர் முனைவர் நா.கண்ணனுடன் 12ம் உலகத்தமிழ் இணைய மாநாட்டின் (கோலாலம்பூர்) போது நடத்திய நேர்காணல்: