Saturday, September 14, 2013

ஈமக்கிரியை மயானப்பகுதி சின்னங்கள் (சித்தன்னவாசல்)

வணக்கம்.

சித்தன்னவாசல் சிற்பங்களைக் காண  இப்பகுதிக்குச் செல்வோர் பலர். சித்தன்னவாசலுக்குச் செல்லும் முன் சாலையின் இரு பக்கங்களையும் நன்கு கவனித்தால் அங்கு ஆங்காங்கே வயல்வெளியில் நடுகற்கள் இருப்பதைக் காணலாம். அதனைப் வீடியோ பதிவாக்கி இருந்தேன்.  சிறிய விழியப்பதிவாக அது இன்று மண்ணின் குரல் வெளியீடாக மலர்கின்றது.

சாலையின் ஒரு பகுதியில் புதருக்குள் ஓரிரு நடுகற்கள்;  சாலையின் மறுபகுதியில் இந்த நடுகற்களில் சில உடைந்து சிதறிக் கிடக்கின்றன. ஏன் இந்த நிலை?

என்னுடன் இப்பயணித்தில் இணைந்து வந்த பரந்தாமன் (தொல்லியல் துறை ஆய்வாளர்) இப்பகுதி நாளுக்கு நாள்  சேதமடைந்து வருவதை குறிப்பிட்டார். 

ஓரளவு சேதமடையாமல் இருக்கும் நடுகற்களை இங்கே பாதுகாப்பில் வைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். அது சாத்தியமில்லாத நிலையில் இந்த வரலாற்றுச் சின்னங்களை அருங்காட்சியகங்களுக்குக் கொண்டு சென்று அங்கு பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, September 8, 2013

கோவிலூர் ஆதீன அருங்காட்சியகம் - பகுதி 2

கோவிலூர் செட்டிநாடு அருங்காட்சியகம்.

Saturday, September 7, 2013

கோவிலூர் ஆதீன அருங்காட்சியகம் - பகுதி 1

வணக்கம்.

சென்ற வாரம் வெளியிடப்பட்ட மண்ணின் குரல் விழியப் பதிவில் கோவிலூர் ஆதீனத்தின் தற்போதைய ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் பெய்யப்ப ஞான தேசிகருடன் நடத்தப்பட்ட பேட்டியின் முதல் பதிவினையும் இரண்டாம் பதிவினையும் அது தொடர்ந்து ஆலயம், மடம் ஆகியவை இருக்கும் சூழலையும் விளக்கும் விழியப்பதிவுகளை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இங்கே அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தின் முழுப் பதிவு 2 பாகங்களாக வெளியிட உள்ளோம். அதன் முதல் பதிவு, 10 நிமிட விழியம் இன்று வெளியீடு காண்கின்றது.

மடத்தின் தொடக்கம், மடாதிபதிகள், மடத்தின் செயல்பாடுகள் என்னும் வகையிலும்,  செட்டிநாட்டு முக்கிய விஷயங்களை விளக்குவதாகவும்  இந்தப் பதிவு அமைந்திருக்கின்றது. இது ஏறக்குறைய 10 நிமிடங்கள் வரும் ஒரு பதிவு.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, September 2, 2013

கோவிலூர் ஸ்ரீ கொற்றவாளீஸ்வரர் கோயில்