Saturday, September 14, 2013

ஈமக்கிரியை மயானப்பகுதி சின்னங்கள் (சித்தன்னவாசல்)

வணக்கம்.

சித்தன்னவாசல் சிற்பங்களைக் காண  இப்பகுதிக்குச் செல்வோர் பலர். சித்தன்னவாசலுக்குச் செல்லும் முன் சாலையின் இரு பக்கங்களையும் நன்கு கவனித்தால் அங்கு ஆங்காங்கே வயல்வெளியில் நடுகற்கள் இருப்பதைக் காணலாம். அதனைப் வீடியோ பதிவாக்கி இருந்தேன்.  சிறிய விழியப்பதிவாக அது இன்று மண்ணின் குரல் வெளியீடாக மலர்கின்றது.

சாலையின் ஒரு பகுதியில் புதருக்குள் ஓரிரு நடுகற்கள்;  சாலையின் மறுபகுதியில் இந்த நடுகற்களில் சில உடைந்து சிதறிக் கிடக்கின்றன. ஏன் இந்த நிலை?

என்னுடன் இப்பயணித்தில் இணைந்து வந்த பரந்தாமன் (தொல்லியல் துறை ஆய்வாளர்) இப்பகுதி நாளுக்கு நாள்  சேதமடைந்து வருவதை குறிப்பிட்டார். 

ஓரளவு சேதமடையாமல் இருக்கும் நடுகற்களை இங்கே பாதுகாப்பில் வைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். அது சாத்தியமில்லாத நிலையில் இந்த வரலாற்றுச் சின்னங்களை அருங்காட்சியகங்களுக்குக் கொண்டு சென்று அங்கு பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: