Sunday, June 11, 2017

சேர்மன் மாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி - த.ம.அ நிகழ்வு

​வணக்கம்.

​கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளிக்குப் பரிசாக ஒரு கணினி வழங்கினேன். இந்த நிகழ்வில் என்னுடன் நம் த.ம.அ நண்பர்கள் திரு.சொ.வினைதீர்த்தான், முனைவர். சந்திரமோகன், முனைவர் காளைராசன் ஆகியோர் உடன்வந்து பள்ளி மாணவர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்தனர்.


இந்த நிகழ்வின் விழியப் பதிவினை இன்று வெளியிடுகின்றேன்.
பள்ளி மாணவியரின் திருக்குறள் நடனம், அபிராமி அந்தாதி நடனம், மூதுரை பேச்சு, திருவாய்மொழி ஒப்புவித்தல் ஆகியவற்றோடு தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் அவர்களின் உரை, எனது உரை அதன் பின் மாணவர்களின் கேள்விகள், மற்றும் போட்டிகளில் பரிசு பெற்றோருக்கானப் பரிசுகளை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளை இந்த விழியப் பதிவில் காணலாம்.


யூடியூபில் காண:     ​ https://www.youtube.com/watch?v=OlE8bc8I8BE&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: