Saturday, March 16, 2019

நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம் - திருநாரையூர்



சைவ சமய தோத்திரங்களான  பதினொரு திருமுறைகளையும் தொகுத்து வழங்கியதோடு பல நூல்களையும் இயற்றிய நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த ஊர் திருநாரையூர். இது கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். காட்டுமன்னார்குடியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது இந்தச் சிற்றூர். திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரின் அருள்பெற்றவராக  நம்பியாண்டார் நம்பி அறியப்படுகிறார். 

மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் அரசனின் ஆதரவுடன், சிலைவடிவில் தேவார மூவரைத் தில்லையில் எழுந்தருளச் செய்து, அங்குக் கோயிலிலிருந்த தேவாரத் திருமுறைகளை   மீட்டெடுத்துத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.  பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.

சிதம்பரம் நடராஜபெருமான் கோவிலில் ஒரு பூட்டப்பட்ட அறையில் தேவாரத் திருமுறைகள் அடைந்து கிடைந்தன. கவனிப்பாரற்று செல்லரித்துப் போன நிலையில் இருந்த தேவார ஓலைச்சுவடிகளை நம்பியாண்டார் நம்பிகள் மாமன்னன் ராஜராஜனின் ஆதரவுடன் வெளிக்கொணர்ந்து செல்லரித்தவை போக எஞ்சியவற்றை பாதுகாத்து அவற்றை உலகுக்கு அளித்தார்.  தேவாரப் பாடல்களை எழுதிய மூவர் வந்தால் மட்டுமே அந்த ஓலைச்சுவடிகளை வழங்குவோம் என தடுத்து நின்ற சிவாச்சாரியார்களை தந்திரமான முறையில் எதிர்கொண்டு  தமிழ்தோத்திரங்களை உலகறியச் செய்தனர் நம்பியாண்டார் நம்பிகளும் மாமன்னன் ராஜராஜனும்.

அத்தகைய சிறப்பு பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் பிறந்து வளர்ந்து சைவத் தொண்டாற்றிய திருநாரையூர் கோயிலையும், அவர் வழிபட்ட பொல்லா பிள்ளையார் சிலையையும், அவ்வூரையும் இப்பதில் காணலாம்.

இப்பதிவினைச் செய்திட உதவிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.அன்பு அரசன், மற்றும் பேரா.முனைவர்.பழனிவேல் ராஜா, பேரா.முனைவர்.ஆர்.எஸ்.குமார் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

யூடியூபில் காண:   

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: