Friday, August 26, 2016

சாத்தனூர் கல்மரப்பூங்கா

​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



பல நூறு ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவில் இருந்த கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. வரையில் பரவியிருந்ததாக கூறப்படுகிறது. புவியியல் கணக்கீட்டின்படி க்ரிடேஷஸ் எனப்படும் காலத்தைச் சேர்ந்த கோனிபரஸ் எனப்படும் பூக்காத தாவர வகையைச் சேர்ந்த மரம் இது என்று புவியியல் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மரம் 18 அடி நீளமாகும்.


ஏறக்குறை 6 நிமிட விழியப் பதிவு இது.


யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=36NMLG8FIMY&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இப்பதிவினைச் செய்ய உதவிய திருச்சி தூயவளனார் கல்லூரி பேராசிரியர் திரு.தமிழ்சூசை அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

0 comments: