Wednesday, October 12, 2016

நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

திருச்சியைப் பற்றிய விரிவானதொரு நூல் "நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி".


இந்த நூலின் ஆசிரியர் சு.முருகானந்தம் அவர்கள் திருச்சியைப் பற்றிய விரிவானதொரு பேட்டியைத்  தமிழ் மரபு அறக்கட்டளைக்காக  அளித்திருக்கின்றார்.

இந்த நூலின் துணை ஆசிரியர்கள்:

  • கவிஞர் நந்தலாலா
  • பைம்பொழில் மீரான்
  • தி.மா.சரவணன்

ஆகியோர்



இந்த  நூல் எழுத ஆர்வம் தோன்றிய காரணங்கள் எனத் தொடங்கி திருச்சி பற்றிய வரலாற்றுப் பதிவாக இந்த நூல் உருவாகிய நிகழ்வையும், நூலின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள தகவல்களையும் பற்றி விவரிக்கின்றார். அதில் சில..


  • சூளூர் வரலாற்றை ஒட்டி அதே போல ஒரு நூலினைத் திருச்சிராப்பள்ளி தொடர்பில் உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்ற இந்த முயற்சி தொடங்கப்பட்டமை
  • கற்காலம் தொடங்கி, கல்வெட்டு காலம், தற்காலம் வரையிலான செய்திகள்

  • நதி நீர் வழிகள்  
  • எந்த மத இன, சாதிய  சார்பு நிலையும் இல்லாமல் இந்த நூலில் கட்டுரைகள் சேகரிக்கப்பட்டிருக்கும் நிலை
  • பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாறு
  • ரோபர்ட் நோபிலி பற்றிய செய்திகள்
  • இஸ்லாமிய தர்கா - சிரியாவிலிருந்து வந்த பெரியவர், அரச பரம்பரையைச் சேர்ந்தவர் திருச்சியில் தங்கி இருந்த நினைவாக உருவாகியிருக்கும் தர்கா
  • இங்கு வாழ்ந்த சூஃபிகள், பெண் சூஃபிகளுக்கான தர்கா, அங்கு வழக்கில் உள்ள சடங்குகள் என்பன போன்ற தகவல்கள்
  • அருகன் கோட்டம் பற்றிய சில செய்திகள்
  • உறையூர் -  முற்காலச் சோழர்களின் தலைநகரமாக இந்த நகர் விளங்கியமை
  • சுதந்திரப் போராட்டம் தொடர்பான செய்திகள் - 1800கள் தொடங்கி யாவர் அதில் ஈடுபட்டனர், சுதந்திரப் போராட்டத்தில் பொது மக்களின் ஈடுபாடு 
  • திருச்சியில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி
  • பொது உடமைக்கட்சி, தொழிலாளர் போராட்டம்
  • தூயவளனார் கல்லூரி நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டமை பற்றிய செய்திகள்
  • திருச்சி ஏன் தமிழகத்தின் தலைநகரமாக அமையவில்லை என்பதற்கான சில கருத்துக்கள்
  • மாயனூர் - சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் எல்லைக் குறியீடாக அமைந்த சுவரின் எச்சங்கள்
  • பண்டைய பெருவழி சாலை, மங்கம்மா சாலை,
  • குடைவரைக் கோயில்கள்
  • போர்க்களங்கள்
  • உய்யங்கொண்டான் திருமலை, பொன்மலை பற்றிய செய்திகள்
  • மகாத்மா காந்தி, காந்தி மார்க்கெட்டில் மகாத்மா காந்தி அடிககல் நாட்டிய  செய்திகள், உப்பு சத்தியாகிரகம்
  • முத்துராமலிங்கத் தேவர் பற்றிய செய்திகள்
  • திருச்சி தமிழ்ச்சங்கம் பற்றிய செய்திகள்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய செய்திகள்
  • சைவ சமயக் கோயில்கள் - தென்கலைத் தலங்களில்  ஐயர் மலை, கடம்பர் கோயில், பராய்த்துறை, உய்யகொண்டான் திருமலை - கற்குடி, திருமூக்கீச்சுரம்,     தாயுமானசாமி கோயில், எறும்பேசுவரர் கோயில்
  • வடகலைத்தலங்களில், ஈய்ங்கோய் மலை - முசிறி, திருப்பைங்கிளி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில், இப்படி பல சைவத் தலங்கள் பற்றிய தகவல்கள்
  • அரசியார் மீனாட்சி - சந்தாசாகிப் பற்றிய செய்திகள்
  • தாயுமான சாமிகள்
  • இங்கு புகழ்பெற்ற காத்தவராயன் கதை
  • பொன்னர் சங்கர் கதை சொல்லிகள்
  • ...
இப்படி திருச்சியைச் சுற்றி நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளின்  தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

இத்தகைய வரலாற்று நூலை உருவாக்க அதற்காக உழைத்து மிக நல்லதொரு டஹ்மிழ்ச்சேவை செய்திருக்கும் பெரியவர் சு.முருகானந்தம் அவர்களுக்கும், இந்த   நூல் வெளிவர பல்வேறு வகையில் உழைத்த ஆர்வலர்களையும் பாராட்டுவது நம் கடமை!

விழியப் பதிவைக் காண:    
யூடியூபில் காண:    


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

0 comments: