Friday, May 30, 2014

சோழ நாட்டுக் கோயில் - காமரதிவல்லி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

சோழர் காலக் கோயிலில் வரிசையில் மேலும் ஒரு பழமையான கோயிலின் பதிவை இன்று காணவிருக்கின்றோம்.

​தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருப்பது காமரதிவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோயில். இக்கோயில் சுந்தர சோழனால் இன்றைக்கு சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

மிக மோசமான நிலையில் சிதைந்திருந்த இந்தக் கோயில் சென்னையைச் சார்ந்த மாகாலக்‌ஷ்மி சுப்பிரமணியம் அவர்களது ட்ரஸ்ட் பெரு முயற்சியில் உள்ளூர் மக்களின் பேராதரவுடனும், ஒத்துழைப்புடனும், உழைப்புடனும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது.


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Kxs-J4VNG4Q

இப்பதிவு ஏறக்குறைய 14 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!

இவ்விழியம் 1.3.2013ம் நாள் பதிவாக்கப்பட்டது. இப்பதிவினைச் செய்ய துணை புரிந்த திரு.சுந்தர் பரத்வாஜ், டாக்டர்.பத்மாவதி, திரு.பரந்தாமன், காமரதிவல்லி ஆலயபொறுப்பாளர், கிராம நாட்டாமை, கிராம மக்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, May 24, 2014

திருச்சி தமிழ்ச் சங்கம்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு செய்து வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது. 

இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என விரிவாக விளக்குகின்றார் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் (செயலாளர்).

இந்த விழியப் பதிவில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றையும் சங்கத்தின் மேலும் ஒரு பொருப்பாளர் விளக்குகின்றார்.

இப்பதிவு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நான் தமிழகத்தில் இருந்த பொழுதில் திருச்சி தமிழ்ச்சங்கக் கட்டிடத்திலேயே பதிவாக்கப்பட்டது.


யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=c86a_hHoE-w

இப்பதிவு ஏறக்குறைய  23  நிமிடங்கள் கொண்டது.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, May 17, 2014

சித்தன்னவாசல்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Friday, May 9, 2014

Water for All : DBS-NUS Social Venture Challenge Asia Semifinalist Spotl...

Thursday, May 8, 2014

கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வெளியீட்டு வரிசையில் மேலும் ஒரு சிறப்பு மிக்க கோயில்.!


யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவல்களை நமக்காகப் பகிர்ந்து கொள்பவர் தமிழகத் தொல்லியல் துறையின் டாக்டர்.பத்மாவதி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Thursday, May 1, 2014

Raja Ravi Varma - The Great Indian Painter


Created by Themozhy

World Heritage Sites in India

Click here to view the video!

This video clip is Created by Themozhy.

Tuesday, April 29, 2014

திருஎறும்பேஸ்வரர் கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் மேலும் ஒரு கோயில்.!

விலங்குகள் வழிபடும் ஆலயங்கள் என பிரத்தியேகமாக குறிப்பிடப்படும் ஆலயங்களின் வரிசையில் எறும்புகள் வழிபட்ட தலமாக கருதப்படுவது திருவெறும்பேஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் புற்றுமண்ணால் உருவாகியிருக்கும் சுயம்புலிங்கம். அபிஷேக காலங்களில் லிங்க வடிவத்தின் மேல் கவசம் அணியப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.

விழியப் பதிவைக் காண:


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=7cfjTStpZ3U

இப்பதிவு ஏறக்குறைய 13 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் இங்கே!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவ்ல்களை பகிர்ந்து கொள்பவர் இந்திய தொல்லியல் துரை ஆய்வு மாணவர் பரந்தாமன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, April 12, 2014

கர்னல் காலின் மெக்கன்சி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடாக விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

காலின் மெக்கன்சி ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். இந்தோனீசியாவில் பணிபுரிந்து பின்னர் இந்தியாவிற்கு  நில அளவையாளராக பணி புரிய வந்தவர்.

இவரை பலரும் அறியாமல் இருக்கலாம். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமையிலும் ஆவணங்களைத் தேடியும் அவற்றை தொகுத்தும் வைத்தவர். தம் சொந்த பணத்தைச் செலவழித்து உதவியாளர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று அவர் தொகுத்தசுவடிகளும் படியெடுத்த கல்வெட்டுக்களும் இந்திய வரலாற்றைச் சொல்லும் சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன.

மெக்கன்ஸி தொகுத்த ஆவணங்கள் மூன்று பகுதிகளாக சென்னையிலும், கல்கத்தாவிலும், லண்டன் நூலகத்திலும் உள்ளன.

2013 மார்ச் மாதம் எனது தமிழகப் பயணத்தின் போது நேரடியாக அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்று நான் செய்த பதிவு இது.

காலின் மெக்கன்சியின் பணிகளை ஆய்வு செய்து இரண்டு நூல்களை வெளியுட்டுள்ள டாக்டர்.ம.ராஜேந்திரன் (முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக் துணைவேந்தர்( தனது நூலில் இப்படிக் கூறுகின்றார்.

18,19ம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் ஆகியோரும் தமிழகத்திலே உ.வே.சா, வ.உ.சி ஆகியோரும் தொகுப்பிலும் பதிப்பிலும் ஈடுபட்டவர்களில் முன்னோடிகளாவார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பும் பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின்பும் ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தில் ஆட்பட்டுக் கிடந்த இந்தியாவில் தொகுப்புப் பணியைத் தொடக்கிவைத்த முதல் ஐரோப்பியர் கர்னல் காலின் மெக்கன்சியாவார்.

12 நிமிடங்கள் வருகின்ற இப்பதிவில் காலின் மெக்கன்சியின் தொகுப்பாக அமைந்திருக்கும் பல சுவடிகளையும் வியப்பில் ஆழ்த்தும் வடிவிலான சுவடிக்கட்டுக்களையும் காணலாம்.



யூடியூபில் இப்பதிவைக் காண:https://www.youtube.com/watch?v=l2cTvQ2T3hI

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Sunday, April 6, 2014

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இன்று மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினம். அதனை முன்னிட்டு மகாவித்வான் தங்கியிருந்து தமிழ்த்தொண்டு செய்த திருவாவடுதுறை ஆதீன மடம், புலவர்கள் விடுதி, சரசுவதி மகால் நூலகம். ஓலைச்சுவடி நூல்கள், ஆதீ​​னத்தின் சுற்றுவளாகம் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு சிறிய விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது. இப்பதிவு 13 நிமிடங்கள்

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருவாவடுதுறை மடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது அங்கு பதிவு செய்யப்பட்ட விழியம் இது.

யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=NBk7eMt9gOY


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​