வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று மரணத்திற்குப் பின் என்ன? மறு ஜென்மம் உண்டா? என்பது!
இங்குதான் கண்டவர் விண்டதில்லை சமாச்சாரம் வருகிறது, ஏனெனில் நமக்கு போன ஜென்மத்தில் என்ன செய்தோம் என்று ஞாபகம் வருவதில்லை.
மறுஜென்மம் உண்டு என்று சொல்ல வரும் நிகழ்வு இன்று நிகழ்கலையில்.
ஒரு சின்ன வாண்டு ராகங்களைப் பட்டு, பட்டு என்று கண்டு சொல்கிறது! பாம்பே ஜெயஸ்ரீ சொல்வது போல் அவர் ஒரு ராகம் எடுத்து, அடுத்த ராகம் யோசிப்பதற்குள் இது சொல்லிவிட, அவர்களுக்கு யோசிக்க நேரம் கொடுப்பதில்லை இச்சிறுமி!
பச்சிளம் மாறாத முகம். கொட்டாவி விடுகிறது. கழுத்து செயினை நமண்டுகிறது. காது மட்டும் என்ன ராகம் என்பதில். ஆனால் குரலிலிருந்து ராகம் புறப்படும் போதே இவளிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்படும் போல..
Friday, June 27, 2008
அதிசயக் குழந்தை (2)
Posted by
நா.கண்ணன்
at
10:00 AM
Labels: carnatic music, pattern recognition, ragas, Wonder kid
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment